காட்டு யானை தாக்கி ஒருவர் பலி – நீலகிரியில் பீதி
Aug 18, 2025, 05:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி – நீலகிரியில் பீதி

Web Desk by Web Desk
Nov 25, 2023, 03:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரியில் காட்டு யானை தாக்கியதில் தேயிலை தோட்டத் தொழிலாளி ஒருவர் பரிதாபமாகப் பலியானார். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

வனப்பகுதியில் இருந்து உணவு தேடி காட்டு யானைகள் அவ்வப்போது வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களுக்கு வருவது வழக்கம். அவ்வாறு வரும் காட்டு யானைகள் உணவு கிடைத்தவுடன் மீண்டும் வனப்பகுதிக்குச் சென்று விடும். ஒரு சில யானைகள் மட்டும் ஆக்ரோஷம் கொண்டு வீடுகளைத் தாக்குவதும், மனிதர்களைத் தாக்குவதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் பால்ரோடு பாண்டியார் அரசு தேயிலை தோட்டத் தொழிற்சாலையில் 55 வயதான பிரான்சிஸ் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம்போல் பணி முடித்துவிட்டு, வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, அவரை வழிமறித்த காட்டு யானை ஒன்று தாக்கியுள்ளது. இதில், அவர் படுகாயமடைந்தார். சாலையில் சென்றவர்கள் அவரைக் காப்பாற்றி, வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு, மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்தபோது, அவர் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் நீலகிரி மாவட்ட மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இதனால், கூடலூர் பால்ரோடு பாண்டியார் அரசு தேயிலை தோட்டப் பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திமுக ஆட்சி அமைந்தது முதலே, வனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் மீது அக்கறை காட்டாமல் வனத்துறை உள்ளது. மேலும், வனவிலங்கு – மனித மோதல் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், வனத்துறையினர் அலட்சியம் காரணமாகவே, தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் சிறையில் இருந்து பாலஸ்தீனியர்கள் விடுதலை!

Next Post

வைகை அணையில் இருந்து கரைபுரண்டோடும் வெள்ளம்

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies