இஸ்ரேல் சிறையில் இருந்து பாலஸ்தீனியர்கள் விடுதலை!
Jul 21, 2026, 03:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் சிறையில் இருந்து பாலஸ்தீனியர்கள் விடுதலை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 25, 2023, 03:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலில் இருந்து கடத்திச் சென்ற பிணைக் கைதிகள் 25 பேரை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்திருக்கும் நிலையில், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 39 கைதிகளை இஸ்ரேல் விடுவித்திருக்கிறது.

இஸ்ரேல் மற்றும் காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடந்த மாதம் 7-ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய் விட்டது. மின்சாரம், குடிநீர் இன்று மக்கள் அவதிப்பட்டு வருவதோடு, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருந்துகள் இல்லாமல் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, காஸா நகர மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை வழங்க இந்தியா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா.வும் நடவடிக்கை மேற்கொண்டன. அதேசமயம், பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக கத்தார் நாட்டு உதவியுடன் அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், போர் நிறுத்தம் தொடர்பாகவும் பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், கத்தார் மற்றும் அமெரிக்கா முயற்சியில் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தீவிரவாதிகள் சம்மதம் தெரிவித்தனர். அதேசமயம், இஸ்ரேல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்க வேண்டும். 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். இதற்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, 4 நாட்களில் 50 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிப்பது எனவும், பதிலுக்கு 150 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், முதல்கட்டமாக தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 12 பேர் உட்பட 25 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. பதிலுக்கு, இஸ்ரேல் சிறையில் இருந்த 39 பாலஸ்தீனிய கைதிகளை அந்நாடு விடுவித்தது.

இந்த 39 பேரில் 25 பேர் பெண்கள், 14 பேர் இளைஞர்கள். மேற்கண்ட 25 பெண்களும் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது, கத்திக்குத்து ஆகிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள். அதேபோல, இளைஞர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களில், 33 பேர் மேற்குக் கரையில் உள்ள சிறையில் இருந்தும், 6 பேர் ஜெருசலேமில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்டதும் சிறையில் இருந்து வெளியே வந்த பெண்கள், அவர்களது குடும்பத்தினருடன் இணைந்தனர். அவர்களை ஆனந்த கண்ணீருடன் குடும்பத்தினர் வரவேற்றனர். இளைஞர்களை தோளில் தூக்கி சந்தோசத்தை வெளிப்படுத்தினர். தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் கூடி வாண வேடிக்கை நிகழ்த்தி சந்தோசத்தை வெளிப்படுத்தினர்.

ஒப்பந்தத்தின்படி, ஹமாஸ் 250 பிணைக் கைதிகளையும் விடுவிக்கும்போது, சுமார் 1,000 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.

Tags: IsraelreleasehostagesPalastine
ShareTweetSendShare
Previous Post

ரிங்கு சிங் வாழ்க்கையை மாற்றிய தோனி !

Next Post

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி – நீலகிரியில் பீதி

Related News

நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசி – இந்தியா ஒப்புதல்!

பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

திமுக எம்எல்ஏ கைது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம் – காவல்துறை அராஜகம்!

போலீசார்  துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர் – கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் மகன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ – பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு!

ஜந்தர் மந்தர் CJP கூடாரங்கள் அகற்றல் ; காவல்துறை நடவடிக்கை!

துப்பாக்கி முனையில் மிரட்டும் காவல்துறையினர்; எம்.எல்.ஏ புகார்

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

51 மதிப்பெண்ணில் தொடங்கிய பயணம் : விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies