இஸ்ரேல் சிறையில் இருந்து பாலஸ்தீனியர்கள் விடுதலை!
Sep 12, 2026, 01:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் சிறையில் இருந்து பாலஸ்தீனியர்கள் விடுதலை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 25, 2023, 03:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேலில் இருந்து கடத்திச் சென்ற பிணைக் கைதிகள் 25 பேரை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்திருக்கும் நிலையில், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 39 கைதிகளை இஸ்ரேல் விடுவித்திருக்கிறது.

இஸ்ரேல் மற்றும் காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடந்த மாதம் 7-ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய் விட்டது. மின்சாரம், குடிநீர் இன்று மக்கள் அவதிப்பட்டு வருவதோடு, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருந்துகள் இல்லாமல் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, காஸா நகர மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை வழங்க இந்தியா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா.வும் நடவடிக்கை மேற்கொண்டன. அதேசமயம், பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக கத்தார் நாட்டு உதவியுடன் அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், போர் நிறுத்தம் தொடர்பாகவும் பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், கத்தார் மற்றும் அமெரிக்கா முயற்சியில் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தீவிரவாதிகள் சம்மதம் தெரிவித்தனர். அதேசமயம், இஸ்ரேல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்க வேண்டும். 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். இதற்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, 4 நாட்களில் 50 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிப்பது எனவும், பதிலுக்கு 150 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், முதல்கட்டமாக தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 12 பேர் உட்பட 25 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. பதிலுக்கு, இஸ்ரேல் சிறையில் இருந்த 39 பாலஸ்தீனிய கைதிகளை அந்நாடு விடுவித்தது.

இந்த 39 பேரில் 25 பேர் பெண்கள், 14 பேர் இளைஞர்கள். மேற்கண்ட 25 பெண்களும் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது, கத்திக்குத்து ஆகிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள். அதேபோல, இளைஞர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களில், 33 பேர் மேற்குக் கரையில் உள்ள சிறையில் இருந்தும், 6 பேர் ஜெருசலேமில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்டதும் சிறையில் இருந்து வெளியே வந்த பெண்கள், அவர்களது குடும்பத்தினருடன் இணைந்தனர். அவர்களை ஆனந்த கண்ணீருடன் குடும்பத்தினர் வரவேற்றனர். இளைஞர்களை தோளில் தூக்கி சந்தோசத்தை வெளிப்படுத்தினர். தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் கூடி வாண வேடிக்கை நிகழ்த்தி சந்தோசத்தை வெளிப்படுத்தினர்.

ஒப்பந்தத்தின்படி, ஹமாஸ் 250 பிணைக் கைதிகளையும் விடுவிக்கும்போது, சுமார் 1,000 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.

Tags: IsraelreleasehostagesPalastine
Share
Tweet
SendShare
Previous Post

ரிங்கு சிங் வாழ்க்கையை மாற்றிய தோனி !

Next Post

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி – நீலகிரியில் பீதி

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies