ஹமாஸின் சுரங்கப்பாதைகள் அனைத்தும் அழிக்கப்படும்: இஸ்ரேல் அறிவிப்பு!
Oct 4, 2025, 03:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸின் சுரங்கப்பாதைகள் அனைத்தும் அழிக்கப்படும்: இஸ்ரேல் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Nov 25, 2023, 05:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏற்கெனவே ஹமாஸ் தீவிரவாதிகளின் சில சுரங்கப்பாதைகள் அழிக்கப்பட்டு விட்டன. போர் நிறுத்தத்திற்கு பிறகு, ஹமாஸ் தீவிரவாதிகளின் சுரங்கப்பாதைகள் அனைத்தும் அழிக்கப்படும் என்று இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஏராளமானோரை சுட்டுக் கொலை செய்ததோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் 1,400 பேர் கொல்லப்பட்ட நிலையில், 3,500 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.

இதையடுத்து, காஸா நகரின் மீது இஸ்ரேல் போர் தொடுத்திருக்கிறது. முதலில் விமானப்படை மூலம் வான்வழித் தாக்குதலில் மட்டுமே ஈடுபட்ட இஸ்ரேல் இராணும், தற்போது முப்படைகளையும் களமிறக்கி விட்டிருக்கிறது. இஸ்ரேலின் இத்தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. மேலும், 14,500 பேர் உயிரிழந்திருப்பதோடு, 25,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள்.

மேலும், இத்தாக்குதலின்போது ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் உட்பட 1,500-க்கும் மேற்பட்ட தீவிரவாத இலக்குகளையும் இஸ்ரேல் இராணுவம் அழித்திருக்கிறது. ஆனாலும், பாதாள அறைகள், சுரங்கப்பாதைகள் ஆகியவற்றுக்குள் ஹமாஸ் தீவிரவாதிகள் மறைந்துகொண்டு, இஸ்ரேல் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த சுரங்கப் பாதைகள் மருத்துவமனைகள், குடியிருப்புப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இதுகுறித்து இஸ்ரேல் இராணுவம் தகவல் தெரிவித்தும், ஹமாஸ் அமைப்பினர் மறுத்து வந்தனர். இதையடுத்து, காஸா நகரின் மிகப் பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையைக் கைப்பற்றிய இஸ்ரேல் இராணுவம், அம்மருத்துவமனையின் அடியில் சுரங்கப்பாதை இருப்பதைக் கண்டுபிடித்து உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. மேலும், இதேபோல பல சுரங்கப்பாதைகளையும் கண்டுபிடித்து அழித்தது.

இதனிடையே, பிணைக் கைதிகள் விடுதலை தொடர்பாக, கத்தார் மற்றும் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஒப்பந்தப்படி ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை விடுவிக்க, பதிலுக்கு பாலஸ்தீன சிறைக் கைதிகளை இஸ்ரேல் விடுவித்து வருகிறது. எனினும், 4 நாள் போர் நிறுத்தத்துக்குப் பிறகு போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து, இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “காசாவில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததும், தீவிரமாக சண்டையைத் தொடர திட்டமிட்டிருக்கிறோம். ஹமாஸின் மேலும் பல இலக்குகள், பல சுரங்கங்கள் தகர்க்கப்பட உள்ளன. இவற்றில் சிலவற்றை போர் நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே அழித்து விட்டோம்.

போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு ஹமாஸ் அமைப்பின் அனைத்து சுரங்கங்கள் அழிக்கப்படும். கூடுதலாக இஸ்ரேல் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படா விட்டால் போர் நிறுத்தம் 27-ம் தேதி காலாவதியாகும். எனினும், காஸா நகர மக்கள் வடக்குப் பகுதிக்குச் செல்ல இஸ்ரேல் பாதுகாப்புப்படை அனுமதிக்காது” என்று கூறியிருக்கிறார்.

Tags: TunnelIsraelHamasDestroy
ShareTweetSendShare
Previous Post

நவம்பர் 26: இந்திய அரசியலமைப்பு தினம்

Next Post

கார்த்திகை தீப வரலாறு!

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies