ஹமாஸின் சுரங்கப்பாதைகள் அனைத்தும் அழிக்கப்படும்: இஸ்ரேல் அறிவிப்பு!
Jan 14, 2026, 08:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸின் சுரங்கப்பாதைகள் அனைத்தும் அழிக்கப்படும்: இஸ்ரேல் அறிவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 25, 2023, 05:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏற்கெனவே ஹமாஸ் தீவிரவாதிகளின் சில சுரங்கப்பாதைகள் அழிக்கப்பட்டு விட்டன. போர் நிறுத்தத்திற்கு பிறகு, ஹமாஸ் தீவிரவாதிகளின் சுரங்கப்பாதைகள் அனைத்தும் அழிக்கப்படும் என்று இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஏராளமானோரை சுட்டுக் கொலை செய்ததோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் 1,400 பேர் கொல்லப்பட்ட நிலையில், 3,500 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.

இதையடுத்து, காஸா நகரின் மீது இஸ்ரேல் போர் தொடுத்திருக்கிறது. முதலில் விமானப்படை மூலம் வான்வழித் தாக்குதலில் மட்டுமே ஈடுபட்ட இஸ்ரேல் இராணும், தற்போது முப்படைகளையும் களமிறக்கி விட்டிருக்கிறது. இஸ்ரேலின் இத்தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. மேலும், 14,500 பேர் உயிரிழந்திருப்பதோடு, 25,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள்.

மேலும், இத்தாக்குதலின்போது ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் உட்பட 1,500-க்கும் மேற்பட்ட தீவிரவாத இலக்குகளையும் இஸ்ரேல் இராணுவம் அழித்திருக்கிறது. ஆனாலும், பாதாள அறைகள், சுரங்கப்பாதைகள் ஆகியவற்றுக்குள் ஹமாஸ் தீவிரவாதிகள் மறைந்துகொண்டு, இஸ்ரேல் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த சுரங்கப் பாதைகள் மருத்துவமனைகள், குடியிருப்புப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இதுகுறித்து இஸ்ரேல் இராணுவம் தகவல் தெரிவித்தும், ஹமாஸ் அமைப்பினர் மறுத்து வந்தனர். இதையடுத்து, காஸா நகரின் மிகப் பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையைக் கைப்பற்றிய இஸ்ரேல் இராணுவம், அம்மருத்துவமனையின் அடியில் சுரங்கப்பாதை இருப்பதைக் கண்டுபிடித்து உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. மேலும், இதேபோல பல சுரங்கப்பாதைகளையும் கண்டுபிடித்து அழித்தது.

இதனிடையே, பிணைக் கைதிகள் விடுதலை தொடர்பாக, கத்தார் மற்றும் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஒப்பந்தப்படி ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை விடுவிக்க, பதிலுக்கு பாலஸ்தீன சிறைக் கைதிகளை இஸ்ரேல் விடுவித்து வருகிறது. எனினும், 4 நாள் போர் நிறுத்தத்துக்குப் பிறகு போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து, இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “காசாவில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததும், தீவிரமாக சண்டையைத் தொடர திட்டமிட்டிருக்கிறோம். ஹமாஸின் மேலும் பல இலக்குகள், பல சுரங்கங்கள் தகர்க்கப்பட உள்ளன. இவற்றில் சிலவற்றை போர் நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே அழித்து விட்டோம்.

போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு ஹமாஸ் அமைப்பின் அனைத்து சுரங்கங்கள் அழிக்கப்படும். கூடுதலாக இஸ்ரேல் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படா விட்டால் போர் நிறுத்தம் 27-ம் தேதி காலாவதியாகும். எனினும், காஸா நகர மக்கள் வடக்குப் பகுதிக்குச் செல்ல இஸ்ரேல் பாதுகாப்புப்படை அனுமதிக்காது” என்று கூறியிருக்கிறார்.

Tags: TunnelIsraelHamasDestroy
ShareTweetSendShare
Previous Post

நவம்பர் 26: இந்திய அரசியலமைப்பு தினம்

Next Post

கார்த்திகை தீப வரலாறு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies