ஹமாஸின் சுரங்கப்பாதைகள் அனைத்தும் அழிக்கப்படும்: இஸ்ரேல் அறிவிப்பு!
Aug 15, 2025, 02:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸின் சுரங்கப்பாதைகள் அனைத்தும் அழிக்கப்படும்: இஸ்ரேல் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Nov 25, 2023, 05:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏற்கெனவே ஹமாஸ் தீவிரவாதிகளின் சில சுரங்கப்பாதைகள் அழிக்கப்பட்டு விட்டன. போர் நிறுத்தத்திற்கு பிறகு, ஹமாஸ் தீவிரவாதிகளின் சுரங்கப்பாதைகள் அனைத்தும் அழிக்கப்படும் என்று இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஏராளமானோரை சுட்டுக் கொலை செய்ததோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் 1,400 பேர் கொல்லப்பட்ட நிலையில், 3,500 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.

இதையடுத்து, காஸா நகரின் மீது இஸ்ரேல் போர் தொடுத்திருக்கிறது. முதலில் விமானப்படை மூலம் வான்வழித் தாக்குதலில் மட்டுமே ஈடுபட்ட இஸ்ரேல் இராணும், தற்போது முப்படைகளையும் களமிறக்கி விட்டிருக்கிறது. இஸ்ரேலின் இத்தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. மேலும், 14,500 பேர் உயிரிழந்திருப்பதோடு, 25,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள்.

மேலும், இத்தாக்குதலின்போது ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் உட்பட 1,500-க்கும் மேற்பட்ட தீவிரவாத இலக்குகளையும் இஸ்ரேல் இராணுவம் அழித்திருக்கிறது. ஆனாலும், பாதாள அறைகள், சுரங்கப்பாதைகள் ஆகியவற்றுக்குள் ஹமாஸ் தீவிரவாதிகள் மறைந்துகொண்டு, இஸ்ரேல் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த சுரங்கப் பாதைகள் மருத்துவமனைகள், குடியிருப்புப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இதுகுறித்து இஸ்ரேல் இராணுவம் தகவல் தெரிவித்தும், ஹமாஸ் அமைப்பினர் மறுத்து வந்தனர். இதையடுத்து, காஸா நகரின் மிகப் பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையைக் கைப்பற்றிய இஸ்ரேல் இராணுவம், அம்மருத்துவமனையின் அடியில் சுரங்கப்பாதை இருப்பதைக் கண்டுபிடித்து உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. மேலும், இதேபோல பல சுரங்கப்பாதைகளையும் கண்டுபிடித்து அழித்தது.

இதனிடையே, பிணைக் கைதிகள் விடுதலை தொடர்பாக, கத்தார் மற்றும் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஒப்பந்தப்படி ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை விடுவிக்க, பதிலுக்கு பாலஸ்தீன சிறைக் கைதிகளை இஸ்ரேல் விடுவித்து வருகிறது. எனினும், 4 நாள் போர் நிறுத்தத்துக்குப் பிறகு போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து, இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “காசாவில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததும், தீவிரமாக சண்டையைத் தொடர திட்டமிட்டிருக்கிறோம். ஹமாஸின் மேலும் பல இலக்குகள், பல சுரங்கங்கள் தகர்க்கப்பட உள்ளன. இவற்றில் சிலவற்றை போர் நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே அழித்து விட்டோம்.

போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு ஹமாஸ் அமைப்பின் அனைத்து சுரங்கங்கள் அழிக்கப்படும். கூடுதலாக இஸ்ரேல் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படா விட்டால் போர் நிறுத்தம் 27-ம் தேதி காலாவதியாகும். எனினும், காஸா நகர மக்கள் வடக்குப் பகுதிக்குச் செல்ல இஸ்ரேல் பாதுகாப்புப்படை அனுமதிக்காது” என்று கூறியிருக்கிறார்.

Tags: TunnelIsraelHamasDestroy
ShareTweetSendShare
Previous Post

நவம்பர் 26: இந்திய அரசியலமைப்பு தினம்

Next Post

கார்த்திகை தீப வரலாறு!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies