இந்தியா vs ஆஸ்திரேலியா : இந்தியா வெற்றி!
Mar 15, 2026, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா vs ஆஸ்திரேலியா : இந்தியா வெற்றி!

Murugesan M by Murugesan M
Nov 27, 2023, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா, ஆஸ்திரேலியா டி20 தொடரின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி அதிரடியாக விளையாடி 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாம் ஆட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வெற்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்கம் முதலே தன்னுடைய அதிரடியான ஆட்டத்தை காண்பிக்க தொடங்கினார்.

பௌண்டரியஸாக விளாசிய ஜெய்ஸ்வால் தொடர்ந்து ஹாட்ரிக் பௌண்டரீஸ் அடித்து ஒரே ஓவரில் 24 ரன்களை குவித்தார். இப்படி அதிரடியாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் 6 வது ஓவரில் 9 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 25 பந்துகளில் 53 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரை தொடர்ந்து இஷான் கிஷன் களமிறங்கினார். ருத்ராஜ் மற்றும் கிஷன் கூட்டணி ஆரம்பத்தில் ரன்களை குவிக்காமல் நிதானமாக விளையாடி வந்தது.

6 வது ஓவரில் இருந்து 12 வது ஓவர் வரை இந்திய அணிக்கு மிகவும் குறைந்த ரன்களே கிடைத்தது. பின்னர் 13 வது ஓவரில் இருவரும் தங்களின் அதிரடி ஆட்டத்தை ஆட தொடங்கினர்.

ஒரு கட்டத்தில் இருவரும் 44 ரன்களில் சமமாக இருந்தனர். யார் முதலில் அரைசதம் எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மைதானத்தில் இருந்த அனைவருக்கும் இருந்தது.

அப்போது சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் முதலில் தனது அரைசதத்தை அடித்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் மொத்தமாக 3 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் என 32 பந்துகளில் 52 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் தான் சந்தித்த முதல் பந்தையே சிக்சராக அடித்தார். அப்போது ருத்ராஜ் தனது அரைசதத்தை பதிவு செய்ததன் மூலம் இந்தியா அணிக்கு தொடர்ந்து 3 அரைசதங்கள் பதிவாகியது.

பின்னர் சூர்யா 2 சிக்சர்கள் அடித்து மொத்தமாக 10 பந்துகளில் 19 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ருத்ராஜ் 3 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 43 பந்துகளில் 58 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

அப்போது களமிறங்கிய ரிங்கு சிங் தனது அதிரடியான ஆட்டத்தைக் காண்பிக்க தொடங்கினார். அவரை போலவே திலக் வர்மா தான் சந்தித்த முதல் பந்தையே சிக்சராக அடித்து 2 பந்துகளில் 7 ரன்களுடன் ஆட்டமிழக்கமால் இருந்தார்.

ரிங்கு சிங் 4 பௌண்டரீஸ் 2 சிக்சர்கள் என மொத்தமாக 9 பந்துகளில் 31 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட்கள் இழப்பிற்கு 235 ரன்களை எடுத்தது.

ஆஸ்திரேலியாவின் அதிகபட்சமாக நாதன் எல்லிஸ் 3 விக்கெட்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 1விக்கெட்டும் வீழ்த்தினர்.

236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்குடன் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மேட் ஷார்ட் களமிறங்கினர்.

மேட் ஷார்ட் 3 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 19 ரன்களுடனும், அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் 2 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 45 ரன்களும், மேத்யூ வேட் 42 ரன்களும் எடுத்தனர்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. இந்தியா அணியில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்களும், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இதனால் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Tags: india vs Australiat20
ShareTweetSendShare
Previous Post

கார்த்திகை பௌர்ணமி & தேவ் தீபாவளி! பிரதமர் வாழ்த்து!

Next Post

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் நோயாளி பலி! – அண்ணாமலை கண்டனம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies