இந்தியா vs ஆஸ்திரேலியா : இந்தியா வெற்றி!
Jul 23, 2025, 08:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா vs ஆஸ்திரேலியா : இந்தியா வெற்றி!

Web Desk by Web Desk
Nov 27, 2023, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா, ஆஸ்திரேலியா டி20 தொடரின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி அதிரடியாக விளையாடி 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாம் ஆட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வெற்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்கம் முதலே தன்னுடைய அதிரடியான ஆட்டத்தை காண்பிக்க தொடங்கினார்.

பௌண்டரியஸாக விளாசிய ஜெய்ஸ்வால் தொடர்ந்து ஹாட்ரிக் பௌண்டரீஸ் அடித்து ஒரே ஓவரில் 24 ரன்களை குவித்தார். இப்படி அதிரடியாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் 6 வது ஓவரில் 9 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 25 பந்துகளில் 53 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரை தொடர்ந்து இஷான் கிஷன் களமிறங்கினார். ருத்ராஜ் மற்றும் கிஷன் கூட்டணி ஆரம்பத்தில் ரன்களை குவிக்காமல் நிதானமாக விளையாடி வந்தது.

6 வது ஓவரில் இருந்து 12 வது ஓவர் வரை இந்திய அணிக்கு மிகவும் குறைந்த ரன்களே கிடைத்தது. பின்னர் 13 வது ஓவரில் இருவரும் தங்களின் அதிரடி ஆட்டத்தை ஆட தொடங்கினர்.

ஒரு கட்டத்தில் இருவரும் 44 ரன்களில் சமமாக இருந்தனர். யார் முதலில் அரைசதம் எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மைதானத்தில் இருந்த அனைவருக்கும் இருந்தது.

அப்போது சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் முதலில் தனது அரைசதத்தை அடித்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் மொத்தமாக 3 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் என 32 பந்துகளில் 52 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் தான் சந்தித்த முதல் பந்தையே சிக்சராக அடித்தார். அப்போது ருத்ராஜ் தனது அரைசதத்தை பதிவு செய்ததன் மூலம் இந்தியா அணிக்கு தொடர்ந்து 3 அரைசதங்கள் பதிவாகியது.

பின்னர் சூர்யா 2 சிக்சர்கள் அடித்து மொத்தமாக 10 பந்துகளில் 19 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ருத்ராஜ் 3 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 43 பந்துகளில் 58 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

அப்போது களமிறங்கிய ரிங்கு சிங் தனது அதிரடியான ஆட்டத்தைக் காண்பிக்க தொடங்கினார். அவரை போலவே திலக் வர்மா தான் சந்தித்த முதல் பந்தையே சிக்சராக அடித்து 2 பந்துகளில் 7 ரன்களுடன் ஆட்டமிழக்கமால் இருந்தார்.

ரிங்கு சிங் 4 பௌண்டரீஸ் 2 சிக்சர்கள் என மொத்தமாக 9 பந்துகளில் 31 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட்கள் இழப்பிற்கு 235 ரன்களை எடுத்தது.

ஆஸ்திரேலியாவின் அதிகபட்சமாக நாதன் எல்லிஸ் 3 விக்கெட்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 1விக்கெட்டும் வீழ்த்தினர்.

236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்குடன் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மேட் ஷார்ட் களமிறங்கினர்.

மேட் ஷார்ட் 3 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 19 ரன்களுடனும், அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் 2 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 45 ரன்களும், மேத்யூ வேட் 42 ரன்களும் எடுத்தனர்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. இந்தியா அணியில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்களும், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இதனால் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Tags: t20india vs Australia
ShareTweetSendShare
Previous Post

கார்த்திகை பௌர்ணமி & தேவ் தீபாவளி! பிரதமர் வாழ்த்து!

Next Post

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் நோயாளி பலி! – அண்ணாமலை கண்டனம்!

Related News

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் – அண்ணாமலை கண்டனம்!

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

இடமாற்றத்தில் மகிழ்ச்சி இல்லை, நல்ல நினைவுகளுடன் செல்கிறேன் – நீதிபதி விவேக் குமார் சிங்

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

100 நாள் வேலை திட்டம் – தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்!

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies