சிஸ்கே அணியில் தொடரும் தோனி!
Jul 24, 2025, 02:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிஸ்கே அணியில் தொடரும் தோனி!

Web Desk by Web Desk
Nov 27, 2023, 04:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் தோனி விளையாடுவாரா மாட்டாரா என்பது தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது. அதற்கு விடை கிடைக்கும் விதமாக தற்போது சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் இருந்து பதில் கிடைத்திருக்கிறது.

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி துபாயில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் 10 அணிகளும் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் இன்று வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா மாட்டாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஒருவேளை தோனி விளையாடவில்லை என்றால் சிஎஸ்கே விடுவித்தவர்கள் பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்தப் பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை.

இதன் மூலம் அடுத்த சீசனில் தோனி கண்டிப்பாக விளையாடுவார் என்பது உறுதியாகிவிட்டது. அடுத்த சீசனில் ஒருவேளை விளையாடவில்லை என தோனி முடிவெடுத்து இருந்தால், அதனை இப்போது தான் சொல்லி இருக்க முடியும்.

ஏனென்றால் அதற்கான மாற்று வீரர்களை சிஎஸ்கே மினி ஏலத்தில் எடுத்திருக்கும். இந்தப் பட்டியலில் தோனியின் பெயர் இல்லை என்பதால் அவர் கண்டிப்பாக அடுத்த சீசனில் கேப்டனாக களமிறங்க உள்ளார்.

எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா,    தோனியின் பெயர் விடுவிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இல்லாதது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும்.

இதன் மூலம் தோனி அடுத்த சீசனில் விளையாட வாய்ப்பு இருக்கிறது என்று அர்த்தம். எனினும் இதனை நாம் முடிவு எடுக்கக் கூடாது.

எப்படி டாஸ் வீசும்போது தோனி சர்ப்ரைஸ் கொடுப்பாரோ அதேபோல் ஐபிஎல் சீசன் தொடக்கத்தில் தன்னுடைய முடிவை தோனி அறிவிக்கலாம். எனினும் தோனி அடுத்த சீசனில் விளையாடுவதாக இருந்தாலும் தொடர்ந்து 14 போட்டிகளில் விளையாடுவாரா என்பது சந்தேகம்தான்.

தன்னுடைய உடல் தகுதியை பார்த்துக் கொள்வதற்காக அவ்வப்போது ஓய்வு கூட தோனி எடுத்துக் கொள்ளலாம் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

தோனி தொடர்ந்து விளையாடுவதில்லை என முடிவு எடுத்தால், 2022ஆம் ஆண்டில் நடந்தது போல் ஜடேஜா தான் கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி இல்லை என்றால் பிளான் பி படி தோனி ஓய்வில் இருக்கும் போட்டியில் ஜடேஜாவோ அல்லது ருதுராஜ் கெய்க்வாட்டோ கேப்டனாக செயல்படுவார்கள்.

Tags: ms dhoni cricketcsk
ShareTweetSendShare
Previous Post

ஆகர் இயந்திர பாகங்கள் வெட்டி அகற்றும் பணி நிறைவு!

Next Post

குஜராத்தில் கனமழை : மின்னல் தாக்கி 20 பேர் பலி!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies