சிஸ்கே அணியில் தொடரும் தோனி!
Jan 14, 2026, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிஸ்கே அணியில் தொடரும் தோனி!

Murugesan M by Murugesan M
Nov 27, 2023, 04:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் தோனி விளையாடுவாரா மாட்டாரா என்பது தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது. அதற்கு விடை கிடைக்கும் விதமாக தற்போது சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் இருந்து பதில் கிடைத்திருக்கிறது.

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி துபாயில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் 10 அணிகளும் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் இன்று வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா மாட்டாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஒருவேளை தோனி விளையாடவில்லை என்றால் சிஎஸ்கே விடுவித்தவர்கள் பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்தப் பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை.

இதன் மூலம் அடுத்த சீசனில் தோனி கண்டிப்பாக விளையாடுவார் என்பது உறுதியாகிவிட்டது. அடுத்த சீசனில் ஒருவேளை விளையாடவில்லை என தோனி முடிவெடுத்து இருந்தால், அதனை இப்போது தான் சொல்லி இருக்க முடியும்.

ஏனென்றால் அதற்கான மாற்று வீரர்களை சிஎஸ்கே மினி ஏலத்தில் எடுத்திருக்கும். இந்தப் பட்டியலில் தோனியின் பெயர் இல்லை என்பதால் அவர் கண்டிப்பாக அடுத்த சீசனில் கேப்டனாக களமிறங்க உள்ளார்.

எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா,    தோனியின் பெயர் விடுவிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இல்லாதது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும்.

இதன் மூலம் தோனி அடுத்த சீசனில் விளையாட வாய்ப்பு இருக்கிறது என்று அர்த்தம். எனினும் இதனை நாம் முடிவு எடுக்கக் கூடாது.

எப்படி டாஸ் வீசும்போது தோனி சர்ப்ரைஸ் கொடுப்பாரோ அதேபோல் ஐபிஎல் சீசன் தொடக்கத்தில் தன்னுடைய முடிவை தோனி அறிவிக்கலாம். எனினும் தோனி அடுத்த சீசனில் விளையாடுவதாக இருந்தாலும் தொடர்ந்து 14 போட்டிகளில் விளையாடுவாரா என்பது சந்தேகம்தான்.

தன்னுடைய உடல் தகுதியை பார்த்துக் கொள்வதற்காக அவ்வப்போது ஓய்வு கூட தோனி எடுத்துக் கொள்ளலாம் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

தோனி தொடர்ந்து விளையாடுவதில்லை என முடிவு எடுத்தால், 2022ஆம் ஆண்டில் நடந்தது போல் ஜடேஜா தான் கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி இல்லை என்றால் பிளான் பி படி தோனி ஓய்வில் இருக்கும் போட்டியில் ஜடேஜாவோ அல்லது ருதுராஜ் கெய்க்வாட்டோ கேப்டனாக செயல்படுவார்கள்.

Tags: ms dhoni cricketcsk
ShareTweetSendShare
Previous Post

ஆகர் இயந்திர பாகங்கள் வெட்டி அகற்றும் பணி நிறைவு!

Next Post

குஜராத்தில் கனமழை : மின்னல் தாக்கி 20 பேர் பலி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies