சுய சார்பு இந்தியாவை வலுப்படுத்தும் வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
அதன் விளைவாக, அடுத்த 4 ஆண்டுகளில் 4000 வந்தே பாரத் இரயில் தயாரிக்கப்படும் என்று 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அதி வேகம், மின்சாரச் சேமிப்பு, பயண நேரம் குறைவு, பயணிகளை விரைவாகக் கொண்டு சேர்க்கும் திறன், வை-பை வசதி, ஜிபிஎஸ் கருவி, பயணிகள் தகவல் மையம், கண்காணிப்பு கேமிரா, அனைத்துப் பெட்டிகளிலும் தானியங்கி கதவுகள், சுழலும் இருக்கைகள், விமானத்தில் இருப்பது போன்று பயோ-வேக்கும் கழிவறைகள் எனப் பல்வேறு சிறப்புகளுடன் வந்தே பாரத் இரயில் இயக்கப்படுகிறது.
முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் இரயில், ஓட்டுநர் இல்லாமல் செமி ஹைஸ்பீடு, சுய உந்துதுதல் மூலம் இயக்கப்படுகிறது.
ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு எஞ்சின் உள்ளால் தாமாகவே உந்தித்தள்ளும் திறன் கொண்டது.
வந்தே பாரத் இரயில் முதன் முதலில் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்த 18 மாதங்களுக்குப் பின்னர் இந்த இரயில் ரூ.100 கோடியில் உருவாக்கப்பட்டது.
தற்போது இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளைக் கொண்டது. இதில், 14 சேர்கார் பெட்டிகளையும், 2 சொகுசு இருக்கைகளும் உள்ளடக்கியது.
வந்தே பாரத் இரயில் 1,100 பயணிகளுடன், மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டது. மேலும், வழக்கமான ஸ்டீல் தகட்டில் இலாலாமல் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்குப் பயண நேரம் 25 சதவீதம் முதல் முதல் 45 சதவீதம் வரை குறைகிறது. மேலும், இதன் மூலம் மின்சாரம் சேமிக்கப்படுகிறது.
கடந்த 2020 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தைச் சேர்ந்த மேதா சர்வோ டிரைவ்ஸ் லிமிட் என்ற நிறுவனத்துக்கு 44 வந்தே பாரத் இரயிலை தயாரிக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டது. வந்தே பாரத் இரயில் வடிவமைப்புக்காகச் சென்னை, கபூர்தலா உள்ளிட்ட 3 இரயில்வே செட்களை இரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ளது.
அதேபோல, சுற்றுசூலுக்கு உகந்த வகையில், ஹைட்ரஜன் இரயில் 35 இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் முதல் இரயில், ஹரியானாவின் ஜின்ட் முதல் சோனிபட் வரை வரும் டிசம்பர் மாதம் முதல் இயக்கப்பட உள்ளது.
மேலும், புல்லட் இரயில் இயக்கும் முயற்சியில் இரயில்வேதுறை தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், குஜராத் மாநிலம் சூரத் முதல் பிலிமொரா வரை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரயில் 2026-ல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி பல்வேறு வகையில், உலகத் தரம் வாய்ந்த இரயில்வேத்துறையை உருவாக்கும் வகையில், நவீன வசதிகளுடன் இரயில்வேதுறை மாற்றியமைத்து வருகிறது பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு.
இதனாலே, பாரதப் பிரதமர் மோடிக்கும், மத்தியில் உள்ள பாஜக அரசுக்கும், பொது மக்களின் ஏகோபித்த ஆதரவு நாளுக்குநாள் பெருகி வருகிறது.