இந்திய ரசிகர்களை சீண்டும் கம்மின்ஸ்!
Jul 23, 2025, 08:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய ரசிகர்களை சீண்டும் கம்மின்ஸ்!

Web Desk by Web Desk
Nov 28, 2023, 03:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் உலகக்கோப்பை வெற்றிக்கு பின்னும் இந்திய அணியை விடாமல் சீண்டி வருகிறார்.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் அப்போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் இந்திய ரசிகர்களை சீண்டும் வகையில் பேசி வருகிறார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடந்த 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இறுதிப் போட்டியை காண சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய ரசிகர்கள் நேரில் வருவார்கள்.

ஆஸ்திரேலிய அணி அவர்களை இந்திய அணிக்கு கோஷமிட முடியாதபடி நிசப்தம் ஆக்கிக் காட்டும். ஒரு லட்சம் மக்கள் நிசப்தமாக ஆக்குவதே எங்களின் இலக்கு என கூறி இருந்தார்.

அவர் சொன்னதைப் போல இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்த போது விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. ஒரு கட்டத்தில் ராகுலுடன் கூட்டணி அமைத்து அரைசதம் அடித்து இருந்த விராட் கோலி ஆட்டமிழந்து வெளியேறினார்.

அப்போது மைதானம் அமைதி ஆனது. பாட் கம்மின்ஸ் சொன்னதைப் போல ஒரு லட்சம் ரசிகர்களை மயான அமைதியுடன் இருக்கச் செய்தார். உண்மையில் அது ஆஸ்திரேலிய அணியின் திறமை மற்றும் பெரிய சாதனை தான்.

ஆனால், அதை உலகக்கோப்பை முடிந்த உடனும் சொல்லிக் காட்டி, அதிலும் உலகக்கோப்பை வென்ற தருணத்தை விட அந்த ரசிகர்களை அமைதி ஆக்கியதே பெரிய தருணம் என கூறுவதெல்லாம் இந்தியாவை சீண்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செய்வது தான்.

அப்படி என்ன சொல்லி இருக்கிறார் என்றால், சாகும் தருவாயில் கூட விராட் கோலி விக்கெட்டுக்கு பின் ஒரு லட்சம் ரசிகர்கள் அமைதியாக இருந்த தருணத்தை நினைத்துப் பார்ப்பேன் என கூறி இருக்கிறார்.

அந்த பேட்டியில் 70 வயதில் உங்கள் மரணப் படுக்கையில் 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டி வெற்றி குறித்து ஒரு தருணத்தை நினைத்துப் பார்க்க வேண்டும் என்றால் எதை நினைத்துப் பார்ப்பீர்கள்? என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது.

அதற்கு பாட் கம்மின்ஸ் அளித்த பதில், “விராட் கோலியின் விக்கெட். அப்போது நான் உற்சாகத்தில் இருந்தேன். நாங்கள் விக்கெட் வீழ்த்திய பின் ஒன்று கூடினோம்.

அப்போது ஸ்டீவ் ஸ்மித், “ஒரு வினாடி ரசிகர்களை கவனியுங்கள்” என்றார். நாங்கள் ஒரு சில வினாடிகள் அமைதியாக இருந்து ரசிகர்களை கவனித்தோம்.

ஒரு நூலகத்தில் எப்படி அமைதியாக இருக்குமோ அப்படி இருந்தது அந்த மைதானம். 1 லட்சம் இந்தியர்கள் அங்கே இருந்தார்கள். ஆனால், அமைதியாக இருந்தது. அந்த தருணத்தை நீண்ட காலம் நான் நினைத்துக் கொண்டே இருப்பேன்” என்றார் கம்மின்ஸ்.

இந்த செயல் சோகத்தில் இருந்த ரசிகர்களை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags: india vs Australiaaustralia cricket
ShareTweetSendShare
Previous Post

சபரிமலை: 2039-ஆம் ஆண்டு வரை படி பூஜை முன்பதிவு!

Next Post

உத்தரகாசி : சற்று நேரத்தில் மீட்புப் பணி தொடக்கம்!

Related News

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் – அண்ணாமலை கண்டனம்!

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

இடமாற்றத்தில் மகிழ்ச்சி இல்லை, நல்ல நினைவுகளுடன் செல்கிறேன் – நீதிபதி விவேக் குமார் சிங்

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

100 நாள் வேலை திட்டம் – தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்!

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies