திருவண்ணாமலை தீப திருவிழாவின் ஒரு பகுதிகயாக அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் மற்றும் துர்கையம்மனுடன் கிரிவலம் வந்தார்.
உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக உள்ள திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்களாக வெகு விமர்சையாக நடைபெற்றது.
26-ம் தேதி அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனை 30 லட்சத்திற்க்கும் அதிகமான பக்தர்கள் கலந்த கொண்டு தரிசித்தனர்.
கார்த்திகை தீபத்திருவிழாவின் ஒரு பகுதியாக திருவண்ணாமலை ஐய்யங்குளத்தில் தெப்ப உற்சவசம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பிறகு, நேற்று காலையில் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் மற்றும் துர்கையம்மனுடன் கிரிவலம் வந்தார்.
கிரிவலத்தின் போது வழிநெடுக பக்தர்கள் பூஜை மற்றும் ஆராதனை செய்து அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷமிட்டு அண்ணாமலையாருக்கு வேட்டி உண்ணாமலை அம்மனுக்கு புடவைகள் அணிவித்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் ஏராளமான வெளிநாட்டினரும் கிரிவலப்பதையில் வந்த அண்ணாமலையாரைப் பூஜித்து தரிசனம் செய்தனர்.