மீண்டும் களமிறங்கும் இலங்கை!
Mar 15, 2026, 03:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீண்டும் களமிறங்கும் இலங்கை!

Murugesan M by Murugesan M
Nov 30, 2023, 02:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக இடைநீக்கம் செய்ததையடுத்து தற்போது இலங்கை கிரிக்கெட் அணி வழக்கம்போல் இருதரப்பு தொடர்களில் விளையாட ஐசிசி அனுமதி அளித்துள்ளது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்த உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெளியேறியது.

இதையடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்து அந்த நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார்.

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க தலைமையில் புதிய இடைக்கால குழுவை அமைத்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக இடைநீக்கம் செய்தது. கிரிக்கெட் அமைப்பு அரசாங்கத்தின் தலையீடு இன்றி தன்னாட்சியுடன் செயல்பட வேண்டும் என்ற அடிப்படை விதிமுறையை மீறியிருப்பதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யின் உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டது.

இதனால் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை விளையாடுமா என்ற சந்தேகம் அனைவரிடமும் இருந்தது.

இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி வழக்கம்போல் இருதரப்பு தொடர்களில் விளையாட ஐசிசி அனுமதி அளித்துள்ளது.

இதை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணி 2024 ஆம் ஆண்டு விளையாட போகும் தொடர் குறித்து அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது.

அதன்படி இலங்கை அணி சொந்த மண்ணில் ஜிம்பாப்வே உடன் 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஜனவரி மாதம் விளையாட உள்ளது.

அதை தொடர்ந்து பிப்ரவரி மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் டி20 போட்டியில் கொண்ட தொடரில் இலங்கை விளையாட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வங்கதேசத்துக்கு சென்று ஒரு நாள் டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.

ஜூலை மாதம் தங்களது சொந்த மண்ணில் இந்தியாவை எதிர்கொண்டு மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டி கொண்ட தொடரில் இலங்கை விளையாடவுள்ளது.

இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

அதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து உடன் இலங்கை விளையாட உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியில் தலைமை செயல் அதிகாரி ஆஸ்லி டி சில்வா அடுத்த ஆண்டு பல விறுவிறுப்பான கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி விளையாட உள்ளது.

இதன் மூலம் ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் நிறைய வாய்ப்புகளும் பொழுதுபோக்கும் கிடைக்கும் என்று தாம் நம்புவதாக கூறியுள்ளார்.

மேலும் இலங்கை அணி அடுத்த ஆண்டு மட்டும் 52 சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: ICCsrilanka cricket
ShareTweetSendShare
Previous Post

டிஎன்டி சான்றிதழ் விவகாரம் – தமிழக பாஜக பரபரப்பு புகார்!

Next Post

இனி வில்லனாக நடிக்க மாட்டேன் – விஜய் சேதுபதி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies