25 ஆண்டுகளாக திறக்கப்படாத ஹோட்டல் - எங்கே உள்ளது!
Jul 28, 2025, 07:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

25 ஆண்டுகளாக திறக்கப்படாத ஹோட்டல் – எங்கே உள்ளது!

Web Desk by Web Desk
Nov 30, 2023, 03:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடகொரியாவில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஹோட்டல் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.

16,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்கப்பட்ட ஹோட்டல் ஒன்று 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படவில்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.

இன்றுவரை அந்த ஹோட்டலுக்கு ஒரு விருந்தினர் கூட வரவில்லை. இப்போது அந்த ஹோட்டல் விளம்பரத்துக்காக மாபெரும் தொலைக்காட்சித் திரையாகப் பயன்படுத்தப்படுகிறது. அதன் பெயர் Ryugyong Hotel.

வடகொரியாவின் தலைநகரான Pyongyang – யில் Ryugyong ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டல் வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங்-உன்னின் ஆடம்பரமான வீட்டில் இருந்து சுமார் 12 மைல் தொலைவில் உள்ளது. இந்த வானளாவிய கட்டிடத்தின் உயரம் 1082 அடியாகும்.

இதில் 3000 அறைகள் கட்டும் திட்டம் இருந்தது. இது பொருளாதார மற்றும் அரசியல் சக்தியின் அடையாளமாக இருந்திருக்க வேண்டும், ஆனால் 25 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளது. இப்போது அதற்கு ‘ஹோட்டல் ஆஃப் டூம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த ஹோட்டலின் கட்டுமானம் 1987 யில் தொடங்கியது. பிறகு 2 வருடங்கள் கழித்து திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. சரியான நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டிருந்தால், இது உலகின் மிக உயரமான ஹோட்டலாக இருந்திருக்கும்.

ஆனால் அதற்குப் பதிலாக, பூமியின் மிக உயரமான காலியான கட்டிடம் என்ற சாதனையை இது பெற்றுள்ளது. இதை கட்டுவதற்கு 1.6 பில்லியன் பவுண்டுகள் செலவானது.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு வட கொரியா பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதால் 1997 யில் இதன் கட்டுமானம் நிறுத்தப்பட்டது.

இந்த கட்டிடத்தில் ஜூலை 2011-ல் வெளிப்புற கண்ணாடி பேனல்கள் நிறுவப்பட்டன. இதற்குப் பிறகு, 2013 ஆம் ஆண்டுக்குள் இந்த ஹோட்டல் கட்டப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது, ஆனால் அது நிறைவேறவில்லை.

இந்த ஹோட்டல் உள்ளே முற்றிலும் காலியாக இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், இந்த கட்டிடத்தில் சில குறைபாடுகளும் உள்ளன.

உதாரணமாக, லிப்ட் ஷாஃப்ட் ‘வளைந்து’ விடப்பட்டதாகவும், அதன் தளங்கள் சாய்வாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஹோட்டலின் அமைப்பு துருப்பிடித்து பலவீனமாகிவிட்டதாகவும் நம்பப்படுகிறது.

2018-ஆம் ஆண்டில், கட்டிடத்தில் எல்இடி பேனல்கள் நிறுவப்பட்டன. பின்னர் இது வட கொரிய அரசாங்க பிரச்சாரத்திற்கான மாபெரும் திரையாக மாற்றப்பட்டது.

Tags: hotelRyugyong Hotel.
ShareTweetSendShare
Previous Post

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் முதல் படம்!

Next Post

அம்மாடியோவ்… இவ்வளவு நீள கூந்தலா? – கின்னஸ் சாதனை படைத்த இந்தியப் பெண்!

Related News

இந்தியா சிங்கத்தைப் போல் உருமாற வேண்டிய நேரம் இது – மோகன் பகவத்

மேட்டூர் அணையில் இருந்து  ஒரு லட்சம் கன அடி நீர் வெளியேற்றம் – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

திமுக ஆட்சியில் ஏரிகள் முறையாக பராமரிக்கப்படவில்லை – அன்புமணி

மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 30-ம் தேதி விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி – F16 ராக்கெட் – மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் உருவம் பொறித்த நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் சிலைகள் மூலம் விநாயகர் சதுர்த்தி விழா – இந்து முன்னணி அறிவிப்பு!

பகைத்துக் கொண்ட வங்கதேசம், மனிதாபிமானத்தை காட்டிய இந்தியா – சிறப்பு தொகுப்பு!

எளிமையின் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அப்துல் கலாம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினம் – பனை விதைகளை நட்ட கல்லூரி மாணவர்கள்!

தமிழகத்தில் ராஜராஜ மற்றும் ராஜேந்திர சோழனுக்கு சிலை – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

கங்கை நீரை கொண்டு வந்தது மூலம் வரலாற்றில் இடம் பிடித்தார் பிரதமர் மோடி – அண்ணாமலை

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் – பிரதமர் மோடி புகழாரம்!

முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறை விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies