இந்தியா, தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் எப்போது?
Sep 9, 2025, 06:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா, தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் எப்போது?

Web Desk by Web Desk
Nov 30, 2023, 07:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 தொடர், டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணி தற்போது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி தொடர்ந்து அபாரமாக விளையாடி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

மூன்று போட்டிகளிலும் இந்தியா 200+ ரன்களை குவித்து அசத்தியது. மீதமுள்ள இரண்டு டி20 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலே இந்தியா தொடரைக் கைப்பற்றிவிடும்.

இதனைத் தொடர்ந்து, இந்திய அணி தென்னாப்பிரிக்கா சென்று டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடவுள்ளது.

டி20 தொடர் டிசம்பர் 10, 12, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் டிசம்பர் 17, 19, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

அடுத்து, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 முதல் 30ஆம் தேதி வரையும், ஜனவரி 3 முதல் 7ஆம் தேதி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டி20 தொடருக்கான இந்திய அணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் ரோஹித், கோலி போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என முன்பு கூறப்பட்டிருந்தது.

இந்த இருவரும், கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய டி20 அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில், ஒருநாள் உலகக் கோப்பையில் இவர்கள் சிறப்பாக செயல்பட்டும் கோப்பையை வெல்ல முடியவில்லை.

இதனால், அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் இளம் வீரர்கள் தான் விளையாடுவார்கள் எனக் கருதப்பட்டது.

டி20 உலகக் கோப்பை தொடரானது மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இதனால், இளம் பேட்டர்களால் காலநிலையை சமாளித்து விளையாடுவது கடினம்.

ஆகையால்தான், டி20 உலகக் கோப்பை தொடரில் ரோஹித், கோலியை விளையாட வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாம். ஆகையால், தென்னாப்பிரிக்க தொடரில் இந்த இருவரும் நிச்சயம் விளையாடுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஓபனர்கள் இடத்தில் கேப்டன் ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில் இருவரும் இருப்பார்கள். மிடில் வரிசையில் விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் ஆகியோர் விளையாட வாய்ப்புள்ளது.

விக்கெட் கீப்பர்கள் இடத்திற்கு கே.எல்.ராகுல், இஷான் கிஷன் ஆகியோர் உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் இடத்தில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், உம்ரான் மாலிக் ஆகியோர் இருக்கிறார்கள். ஸ்பின்னர் இடம் குல்தீப் யாதவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: india vs southafrica
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானா: 51.89 % வாக்குப் பதிவு – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Next Post

எந்த எந்த மாவட்டங்களுக்கு புயல் பாதிப்பு – தெரியுமா?

Related News

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies