உருகும் இமயமலை: ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கை!
Jul 26, 2025, 10:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உருகும் இமயமலை: ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Dec 3, 2023, 12:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புவி வெப்பமயமாதலின் தாக்கத்தால் இமயமலையில் பனிப்பாறைகள் அபாயகரமான அளவில் உருகி வருகின்றன. இதனால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு உடனடி உதவி அவசியம் என்று ஐ.நா. பொதுச் செயலாளா் ஆண்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்திருக்கிறார்.

துபாயில் 28-வது ஐ.நா. பருவநிலை பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் 198 நாடுகளைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றிருக்கிறார்கள். மாநாட்டின் ஒரு பகுதியாக மலைப் பகுதி நாடுகளுடனான கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டெரெஸ் பேசுகையில், “நேபாளத்தில் மலைகளை மூடிய பனி கடந்த 30 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு உருகிவிட்டன. அதேபோல, இமயமலையின் பனிப்பாறைகள் அபாய அளவில் உருகி வருகின்றன. இது புவி வெப்பமடைந்து வருவதன் நேரடித் தாக்கத்தால் நிகழ்ந்திருக்கிறது.

இதனால், பேரழிவு ஏற்படக் கூடும். நேபாளம் போன்ற பாதிக்கப்படக் கூடிய வளரும் நாடுகளின் தேவையைப் பூா்த்தி செய்ய உடனடி உதவி அவசியம். ஆனால், பருவநிலை மாறுபாட்டால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு உதவ வளா்ந்த நாடுகளால் உறுதியளிக்கப்பட்டுள்ள நிதி, தேவையைவிட மிகவும் குறைவாகவே உள்ளது.

எனவே, வளரும் நாடுகளின் தேவைகளை முழுமையாக பூா்த்தி செய்யும் வகையில், சா்வதேச நிதி அமைப்புகள் மற்றும் பன்முக வளா்ச்சி வங்கிகளில் சீா்திருத்தங்கள் அவசியம்.

மேலும், வளரும் நாடுகளின் தேவைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பதோடு, இன்றைய உலகை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் சா்வதேச அமைப்புகளில் சீா்திருத்தங்களை வலியுறுத்தும் முடிவுகள், தற்போதைய மாநாட்டில் எட்டப்பட வேண்டும்.

பனிப்பாறைகள் முழுமையாக உருகி விட்டால், சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய நதிகளில் நீரோட்டம் வெகுவாகக் குறைந்துவிடும். இது சம்பந்தப்பட்ட பகுதி மக்களுக்கு பெரும் இடா்ப்பாட்டை ஏற்படுத்தும். ஆகவே, பனிப்பாறைகள் உருகும் பிரச்னைக்கு உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்” என்றாா்.

இக்கூட்டத்தில், நேபாள பிரதமா் புஷ்ப கமல் தாஹல் உள்ளிட்ட பல்வேறு தலைவா்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனா். இம்மாநாடு டிசம்பா் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Tags: UN Secretary guterresHimalayan hillsSnow
ShareTweetSendShare
Previous Post

டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாள்! – பிரதமர் மோடி அஞ்சலி

Next Post

மிக்ஜாம் புயல்: 5 துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies