ராஜஸ்தானில் இந்து அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை!
Jan 14, 2026, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தானில் இந்து அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 6, 2023, 12:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இந்து ஆதரவு அமைப்பான ஸ்ரீராஷ்ட்ரிய ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுகதேவ் சிங் கோகமெடி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் சுகதேவ் சிங் கோகமெடி. ஜெய்ப்பூர் ஷியாம் நகரில் வசித்து வரும் இவர், ஶ்ரீராஷ்ட்ரிய ராஜபுத் கர்னி சேனா (எஸ்.ஆர்.ஆர்.கே.எஸ்.) அமைப்பின் தலைவராக இருந்தார். இவர், நேற்று மதியம் தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் திடீரென சுகதேவ் சிங் கோகமெடி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. பதிலுக்கு சுகதேவ் சிங் ஆட்கள், அக்கும்பல் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், சுகதேவ் சிங் கோகமெடியும், மர்ம கும்பலைச் சேர்ந்த ஒருவனும் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து ஜெய்ப்பூர் போலீஸ் கமிஷனர் பிஜூ ஜார்ஜ் ஜோசப் கூறுகையில், “துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சுகதேவ் சிங் கோகமெடி, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சுகதேவ் சிங் கோகமெடி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

மேலும், சுகதேவ் சிங் கோகமெடியுடன் பேசிக்கொண்டிருந்த ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதோடு, கோகமெடியின் பாதுகாவலர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்திருக்கிறார்.

அதேபோல, இச்சம்பவத்தின்போது பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எதிர் தரப்பைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டிருக்கிறார். அவரது பெயர் நவீன் சிங் ஷெகாவத் என்பது தெரியவந்திருக்கிறது. துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்ட மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடி வருகிறோம்” என்றார்.

சுகதேவ் சிங் கோகமெடி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன்பு ராஜ்புத் சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டு, கொலையில் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் படுகொலைக்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே,  சுகதேவ் சிங் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் ராஜஸ்தானில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Tags: LEADERRajasthanShoot deadHindu organisation
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை ஹாக்கி : இந்தியா அபார வெற்றி!

Next Post

இந்தோனேசியா எரிமலை வெடிப்பு: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies