சென்னையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இன்று 15 இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரல் – ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி அந்தமான் விரைவு இரயில், சென்னை சென்ட்ரல் – விஜயவாடா விரைவு இரயில், சென்னை சென்ட்ரல் – மைசூர் வந்தே பாரத் இரயில், சென்னை சென்ட்ரல் – மைசூர் சதாப்தி விரைவு இரயில், சென்னை சென்ட்ரல் – கோவை விரைவு இரயில், சென்ட்ரல் – பெங்களூரு பிருந்தவான் விரைவு இரயில், சென்ட்ரல் – திருப்பதி விரைவு இரயில், திருப்பதி – சென்ட்ரல் விரைவு இரயில், சென்ட்ரல் – விஜயவாடா ஜன் சதாப்தி விரைவு இரயில், சென்ட்ரல் – பெங்களூரு டபுள் டக்கர் விரைவு இரயில், சென்னை எழும்பூர் – திருநெல்வேலி வந்தே பாரத் சிறப்பு இரயில், திருநெல்வேலி – சென்னை எழும்பூர் வந்தே பாரத் சிறப்பு இரயில் உட்பட 15 இரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.