திமுக எம்பி செந்தில் குமார் குற்றவாளி - இந்து முன்னணி ஆவேசம்!
Oct 16, 2025, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக எம்பி செந்தில் குமார் குற்றவாளி – இந்து முன்னணி ஆவேசம்!

Web Desk by Web Desk
Dec 7, 2023, 06:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ் சமூகத்தைத் தொடர்ந்து இழிவு படுத்தும் தொடர் குற்றவாளிதான் திமுக எம்பி செந்தில் குமார் என இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பசுவின் கோமியமும், சாணமும் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுவதாக பல்வேறு ஆய்வுகளில் நிருபிக்கப்பட்டுள்ளது. இதை பன்னெடுங்காலத்திற்கு முன்பாகவே அறிந்திருந்த தமிழர்கள் அனுதினமும் அதிகாலையில் பசுவின் சாணம் தெளித்து வாசல் மெழுகி கோலமிட்டு வீட்டை அழகுபடுத்துவதன் மூலம் சுத்தம் சுகாதாரத்துடன் ஆன்மீகத்தையும் இணைத்து இன்று வரையிலும் தனித்துவ பாரம்பரியமாக தமிழர்கள் கடைபிடித்து வருகிறார்கள். பசுவும் கன்றும் மங்கள அடையாளங்கள், பசுவையும் கன்றையும் போற்றி வணங்கும் தெய்வங்களாக கருதுவது தமிழர் பண்பாடு, பசுவையும் காளையையும் வணங்குவதெற்கென்றே மாட்டுபொங்கல் கொண்டாடும் உன்னத பண்பாடு கொண்டது தான் தமிழர்தம் பண்பாடு. அதனாலேயே ஜல்லிக்கட்டு உலகபிரசித்தி பெற்ற விழாவாக உருவெடுத்துள்ளது.

அப்படிப்பட்ட தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கபட்ட தருமபுரி மக்களவை தொகுதி திமுக உறுப்பினர் Dr.செந்தில்குமார் மக்களவையில் பேசியபோது பாஜக வெற்றி பெறும் மாநிலங்கள் கோமூத்ர மாநிலங்கள் என்று குறிப்பிட்டு பேசியுள்ளது, தமிழர்களின் பண்பாட்டையும் நீண்ட நெடிய நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தும் செயலாகும், நாட்டு நலனுக்கும் தொகுதி வளர்ச்சிக்கும் உழைக்கவேண்டிய மக்கள் பிரதிநிதி தன்னை தேர்ந்தெடுத்த மக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்தும் செயலில் அதுவும் மக்களாட்சியின் கோயிலாக கருதபடும் மக்களவையிலேயே ஈடுபடுவது மக்களவையின் மாண்பையும் மக்களாட்சி தத்துவத்தையும் இழிவுசெய்யும் செயல் என்றால் மிகையில்லை.

திமுக தேர்தலின்போது 90% இந்துக்கள் உள்ள கட்சி என்று பசுத்தோல் போர்த்திக் கொண்டு வாக்கு பிச்சை பெறுவதும் வெற்றி பெற்றபின்னர் தன் சுய ரூபத்தை காட்டி இந்துகளையும் இந்துக்களின் வழிபாடு நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தி வதைப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளதை சமீப காலங்களில் மக்கள் மிக தெளிவாக உணர்ந்து வருகிறார்கள். அதே நேரத்தில் தருமபுரி மக்களவை உறுப்பினர் Dr.செந்தில்குமார் திமுகவின் இந்து விரோத நரித்தனத்தை அதி தீவிரமாக செயல்படுத்தும் முன்னோடியாக இருக்கிறார்.

அரசியல் தளத்தில் மாற்று கட்சியினரை விமர்சிப்பதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கையில் பெரும்பான்மை மக்களின் சமய நம்பிக்கையை வாழ்க்கை முறையை கொச்சைபடுத்தி பேசுவது கடும் கண்டனத்துகுரியதும் அவசியமற்ற திமிர்தனமான பேச்சாகும்.

அந்த வகையில் ஒரு நல்ல அரசியல்வாதியாகவும், தன்னை தேர்வு செய்த மக்களின் பாரம்பரியங்களை மதிக்கும் நல்ல மக்கள் பிரதிநிதியாகவும் கூட Dr.செந்தில்குமார் செயல்படவில்லை என்பது அவரை தேர்வு செய்த மக்களுக்கும் மக்களாட்சிக்கும் செய்யும் மாபெரும் துரோகம்.

அவர் பேச்சுக்கு X தளத்தில் மன்னிப்பு கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது ஆனால் Dr.செந்தில்குமார் அவர்கள் தொடர்ந்து பெரும்பாண்மை இந்து சமூகத்தின் தமிழ் சமூகத்தின் நம்பிக்கைகளை கொச்சைபடுத்துவதை வாடிக்கையாக கொண்டவர் . அரசு விழாக்களில் பூமி பூஜைக்கான வழிபாட்டு பொருட்களை எட்டி மிதிப்பது, சிவபெருமானை குடும்ப கட்டுப்பாடு செய்தவரா என பேசியது என ஒவ்வொரு முறையும் நச்சு வாசகங்களை பேசிவிட்டு மன்னிப்பு கோருவதும் வருத்தம் தெரிவிப்பதும் வாடிக்கை என்பதால், அவர் தமிழ் சமூகத்தை தொடர்ந்து இழிவு படுத்தும் தொடர் குற்றவாளி என்பதே நிதர்சனம். ஆதலால் இந்து முன்னனி பேரியக்கம் தருமபுரி மக்களவை உறுப்பினர் Dr.செந்தில்குமார் கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன், எதிர்வரும் தேர்தலில் அவருக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் இவர் போல ஏராளமானவர் அங்கம் வகிக்கும் கட்சிக்கும் தகுந்த படிப்பினையை எதிர்வரும் தேர்தலில் கொடுக்க வேண்டும் இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுகொள்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

Tags: hindu munnani
ShareTweetSendShare
Previous Post

கல்லூரி மாணவர்கள் போராட்டம் – கோவையில் பரபரப்பு!

Next Post

3 மாநில தேர்தல் வெற்றி : உத்திரமேரூர் பாஜகவினர் கொண்டாட்டம்!

Related News

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கேன்டன் கண்காட்சி!

இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்காவின் வரிவிதிப்பு பெரிய தடையாக இருக்காது : ஆர்பிஐ கவர்னர்

ஆகாஷ் ஏவுகணைகளை பிரேசிலுக்கு வழங்க இந்தியா முடிவு!

நித்தியானந்தா மீதான வழக்கு – 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

ஜப்பான் : பூத்து குலுங்கும் விதவிதமான பூக்கள்!

ஜம்மு-காஷ்மீர் : தீபாவளி பண்டிகையையொட்டி சர்வதேச எல்லையில் தீவிர கண்காணிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

4 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

மீரா மிதுன் மீதான பிடிவாரண்ட் ரத்து!

பெருவில் அரசுக்கு எதிராக தொடரும் இளைஞர்கள் போராட்டம்!

புதுச்சேரி : சைபர் க்ரைம் ஆய்வாளர் கீர்த்தி பணியிடை நீக்கம்!

இந்தோனேசியா : வெடித்து சிதறிய லெவொடோபி லகி லகி எரிமலை!

3 குழந்தைகளுடன் உணவு டெலிவரி செய்யும் மலேசிய பெண்!

தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி- பீகார் காங்கிரஸ் பொறுப்பாளர் மீது தாக்குதல்!

கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜுக்கு நீதிமன்ற காவல் நிறைவு!

மத்திய பிரதேசம் : மாசடைந்த கிணற்று நீரை பருகிய பலருக்கு உடல் உபாதை!

சபரிமலை, மாளிகைப்புரம் கோயில்களுக்கான புதிய மேல் சாந்திகள் தேர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies