திமுக எம்பி செந்தில் குமார் குற்றவாளி - இந்து முன்னணி ஆவேசம்!
Jan 14, 2026, 07:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக எம்பி செந்தில் குமார் குற்றவாளி – இந்து முன்னணி ஆவேசம்!

Murugesan M by Murugesan M
Dec 7, 2023, 06:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ் சமூகத்தைத் தொடர்ந்து இழிவு படுத்தும் தொடர் குற்றவாளிதான் திமுக எம்பி செந்தில் குமார் என இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பசுவின் கோமியமும், சாணமும் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுவதாக பல்வேறு ஆய்வுகளில் நிருபிக்கப்பட்டுள்ளது. இதை பன்னெடுங்காலத்திற்கு முன்பாகவே அறிந்திருந்த தமிழர்கள் அனுதினமும் அதிகாலையில் பசுவின் சாணம் தெளித்து வாசல் மெழுகி கோலமிட்டு வீட்டை அழகுபடுத்துவதன் மூலம் சுத்தம் சுகாதாரத்துடன் ஆன்மீகத்தையும் இணைத்து இன்று வரையிலும் தனித்துவ பாரம்பரியமாக தமிழர்கள் கடைபிடித்து வருகிறார்கள். பசுவும் கன்றும் மங்கள அடையாளங்கள், பசுவையும் கன்றையும் போற்றி வணங்கும் தெய்வங்களாக கருதுவது தமிழர் பண்பாடு, பசுவையும் காளையையும் வணங்குவதெற்கென்றே மாட்டுபொங்கல் கொண்டாடும் உன்னத பண்பாடு கொண்டது தான் தமிழர்தம் பண்பாடு. அதனாலேயே ஜல்லிக்கட்டு உலகபிரசித்தி பெற்ற விழாவாக உருவெடுத்துள்ளது.

அப்படிப்பட்ட தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கபட்ட தருமபுரி மக்களவை தொகுதி திமுக உறுப்பினர் Dr.செந்தில்குமார் மக்களவையில் பேசியபோது பாஜக வெற்றி பெறும் மாநிலங்கள் கோமூத்ர மாநிலங்கள் என்று குறிப்பிட்டு பேசியுள்ளது, தமிழர்களின் பண்பாட்டையும் நீண்ட நெடிய நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தும் செயலாகும், நாட்டு நலனுக்கும் தொகுதி வளர்ச்சிக்கும் உழைக்கவேண்டிய மக்கள் பிரதிநிதி தன்னை தேர்ந்தெடுத்த மக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்தும் செயலில் அதுவும் மக்களாட்சியின் கோயிலாக கருதபடும் மக்களவையிலேயே ஈடுபடுவது மக்களவையின் மாண்பையும் மக்களாட்சி தத்துவத்தையும் இழிவுசெய்யும் செயல் என்றால் மிகையில்லை.

திமுக தேர்தலின்போது 90% இந்துக்கள் உள்ள கட்சி என்று பசுத்தோல் போர்த்திக் கொண்டு வாக்கு பிச்சை பெறுவதும் வெற்றி பெற்றபின்னர் தன் சுய ரூபத்தை காட்டி இந்துகளையும் இந்துக்களின் வழிபாடு நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தி வதைப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளதை சமீப காலங்களில் மக்கள் மிக தெளிவாக உணர்ந்து வருகிறார்கள். அதே நேரத்தில் தருமபுரி மக்களவை உறுப்பினர் Dr.செந்தில்குமார் திமுகவின் இந்து விரோத நரித்தனத்தை அதி தீவிரமாக செயல்படுத்தும் முன்னோடியாக இருக்கிறார்.

அரசியல் தளத்தில் மாற்று கட்சியினரை விமர்சிப்பதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கையில் பெரும்பான்மை மக்களின் சமய நம்பிக்கையை வாழ்க்கை முறையை கொச்சைபடுத்தி பேசுவது கடும் கண்டனத்துகுரியதும் அவசியமற்ற திமிர்தனமான பேச்சாகும்.

அந்த வகையில் ஒரு நல்ல அரசியல்வாதியாகவும், தன்னை தேர்வு செய்த மக்களின் பாரம்பரியங்களை மதிக்கும் நல்ல மக்கள் பிரதிநிதியாகவும் கூட Dr.செந்தில்குமார் செயல்படவில்லை என்பது அவரை தேர்வு செய்த மக்களுக்கும் மக்களாட்சிக்கும் செய்யும் மாபெரும் துரோகம்.

அவர் பேச்சுக்கு X தளத்தில் மன்னிப்பு கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது ஆனால் Dr.செந்தில்குமார் அவர்கள் தொடர்ந்து பெரும்பாண்மை இந்து சமூகத்தின் தமிழ் சமூகத்தின் நம்பிக்கைகளை கொச்சைபடுத்துவதை வாடிக்கையாக கொண்டவர் . அரசு விழாக்களில் பூமி பூஜைக்கான வழிபாட்டு பொருட்களை எட்டி மிதிப்பது, சிவபெருமானை குடும்ப கட்டுப்பாடு செய்தவரா என பேசியது என ஒவ்வொரு முறையும் நச்சு வாசகங்களை பேசிவிட்டு மன்னிப்பு கோருவதும் வருத்தம் தெரிவிப்பதும் வாடிக்கை என்பதால், அவர் தமிழ் சமூகத்தை தொடர்ந்து இழிவு படுத்தும் தொடர் குற்றவாளி என்பதே நிதர்சனம். ஆதலால் இந்து முன்னனி பேரியக்கம் தருமபுரி மக்களவை உறுப்பினர் Dr.செந்தில்குமார் கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன், எதிர்வரும் தேர்தலில் அவருக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் இவர் போல ஏராளமானவர் அங்கம் வகிக்கும் கட்சிக்கும் தகுந்த படிப்பினையை எதிர்வரும் தேர்தலில் கொடுக்க வேண்டும் இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுகொள்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

Tags: hindu munnani
ShareTweetSendShare
Previous Post

கல்லூரி மாணவர்கள் போராட்டம் – கோவையில் பரபரப்பு!

Next Post

3 மாநில தேர்தல் வெற்றி : உத்திரமேரூர் பாஜகவினர் கொண்டாட்டம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies