செங்கல்பட்டில் இன்று காலை 7.39 மணிக்கு 3.2 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இன்று காலை 7.39 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பத்து கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டது. செங்கல்பட்டு சுற்று வட்டாரப் பகுதியில், லேசான அதிர்வுகள் உணரப்பட்டதால், மக்கள் அச்சம் அடைந்தனர்.
இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
லேசான நிலநடுக்கம் என்பதால், எந்த சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
















