2 நாட்களில் 3 மாநில பா.ஜ.க. முதல்வர்கள் அறிவிப்பு: முரளிதர ராவ்!
Jan 14, 2026, 08:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 நாட்களில் 3 மாநில பா.ஜ.க. முதல்வர்கள் அறிவிப்பு: முரளிதர ராவ்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 9, 2023, 03:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இன்னும் 2 நாட்களில் 3 மாநிலங்களுக்கான பா.ஜ.க. முதல்வர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று மத்தியப் பிரதேச மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்திருக்கிறார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகள் கடந்த டிசம்பர் 3-ம் தேதி வெளியிடப்பட்டன. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது.

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியும், மிசோராமில் சோரம் மக்கள் இயக்கமும் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கின்றன. இதையடுத்து, தெலங்கானாவில் மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியும், மிசோராமில் சோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்டு ஹோமாவும் முதல்வர்களாகப் பதவியேற்று விட்டார்கள். இவர்களுடன் அமைச்சர்களும் பதவியேற்றிருக்கிறார்கள்.

ஆனால், பா.ஜ.க. வெற்றிபெற்ற மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் இன்னும் முதல்வர்கள் பதவியேற்கவில்லை. இம்மாநிலங்களில் ஏற்கெனவே முதல்வர்களாக இருந்த சிவராஜ் சிங் சௌஹான், வசுந்தரா ராஜே சிந்தியா, ராமன் சிங் ஆகியோருக்கு பதிலாக புதுமுகங்களை முதல்வர்களாக நியமிக்க பா.ஜ.க. தலைமை முடிவு செய்திருக்கிறதாம். இதுதான் தாமதத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, 3 மாநிலங்களுக்கும் புதிய முதல்வர்களை தேர்வு செய்ய குழு ஒன்றையும் பா.ஜ.க. தலைமை நியமித்திருக்கிறது. இக்குழுவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். இக்குழுவினர் 3 பேரும் மேற்கண்ட 3 மாநில முதல்வர்களை தேர்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்னும் 2 நாட்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களுக்கான முதல்வர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று மத்தியப் பிரதேச மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து முரளிதர ராவ் கூறுகையில், “3 மாநில முதல்வர்களை தேர்வு செய்வதற்காக பா.ஜ.க. நாடாளுமன்றக் குழுவால், மத்திய பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் மாநிலங்களுக்கு தங்களது குழு உறுப்பினர்களுடன் சென்று, நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து 3 மாநில முதல்வர்களையும் தேர்வு செய்வார்கள். இப்பணி இன்னும் 2 நாட்களில் நிறைவடைந்து விடும். ஆகவே, 2 நாட்களில் 3 மாநிலங்களுக்கான முதல்வர்களை பா.ஜ.க. தலைமை அறிவிக்கும்” என்று கூறியிருக்கிறார்.

Tags: 3 state CMs2 daysMuralidar rao
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி 7.7%: பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

U – 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் : ஜப்பானை வீழ்த்தியது இலங்கை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies