2 நாட்களில் 3 மாநில பா.ஜ.க. முதல்வர்கள் அறிவிப்பு: முரளிதர ராவ்!
Jul 27, 2025, 03:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 நாட்களில் 3 மாநில பா.ஜ.க. முதல்வர்கள் அறிவிப்பு: முரளிதர ராவ்!

Web Desk by Web Desk
Dec 9, 2023, 03:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இன்னும் 2 நாட்களில் 3 மாநிலங்களுக்கான பா.ஜ.க. முதல்வர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று மத்தியப் பிரதேச மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்திருக்கிறார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகள் கடந்த டிசம்பர் 3-ம் தேதி வெளியிடப்பட்டன. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது.

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியும், மிசோராமில் சோரம் மக்கள் இயக்கமும் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கின்றன. இதையடுத்து, தெலங்கானாவில் மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியும், மிசோராமில் சோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்டு ஹோமாவும் முதல்வர்களாகப் பதவியேற்று விட்டார்கள். இவர்களுடன் அமைச்சர்களும் பதவியேற்றிருக்கிறார்கள்.

ஆனால், பா.ஜ.க. வெற்றிபெற்ற மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் இன்னும் முதல்வர்கள் பதவியேற்கவில்லை. இம்மாநிலங்களில் ஏற்கெனவே முதல்வர்களாக இருந்த சிவராஜ் சிங் சௌஹான், வசுந்தரா ராஜே சிந்தியா, ராமன் சிங் ஆகியோருக்கு பதிலாக புதுமுகங்களை முதல்வர்களாக நியமிக்க பா.ஜ.க. தலைமை முடிவு செய்திருக்கிறதாம். இதுதான் தாமதத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, 3 மாநிலங்களுக்கும் புதிய முதல்வர்களை தேர்வு செய்ய குழு ஒன்றையும் பா.ஜ.க. தலைமை நியமித்திருக்கிறது. இக்குழுவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். இக்குழுவினர் 3 பேரும் மேற்கண்ட 3 மாநில முதல்வர்களை தேர்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்னும் 2 நாட்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களுக்கான முதல்வர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று மத்தியப் பிரதேச மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து முரளிதர ராவ் கூறுகையில், “3 மாநில முதல்வர்களை தேர்வு செய்வதற்காக பா.ஜ.க. நாடாளுமன்றக் குழுவால், மத்திய பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் மாநிலங்களுக்கு தங்களது குழு உறுப்பினர்களுடன் சென்று, நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து 3 மாநில முதல்வர்களையும் தேர்வு செய்வார்கள். இப்பணி இன்னும் 2 நாட்களில் நிறைவடைந்து விடும். ஆகவே, 2 நாட்களில் 3 மாநிலங்களுக்கான முதல்வர்களை பா.ஜ.க. தலைமை அறிவிக்கும்” என்று கூறியிருக்கிறார்.

Tags: 3 state CMs2 daysMuralidar rao
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி 7.7%: பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

U – 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் : ஜப்பானை வீழ்த்தியது இலங்கை!

Related News

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies