சென்னையில் அஞ்சல் குறைதீர்க்கும் கூட்டம்!
Oct 6, 2025, 09:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் அஞ்சல் குறைதீர்க்கும் கூட்டம்!

Web Desk by Web Desk
Dec 10, 2023, 02:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அஞ்சல்துறையின் சார்பில் கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்க்கும் கூட்டம் வரும் டிசம்பர் 14 ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை பொது அஞ்சல் நிலையத்தில் உள்ள தலைமை போஸ்ட் மாஸ்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக அஞ்சல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

அஞ்சல் துறையின் சேவைகள் குறித்த பொதுமக்களின் குறைகளை தலைமை போஸ்ட் மாஸ்டர் கேட்டறிய உள்ளார்.

வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை தலைமை போஸ்ட் மாஸ்டர், சென்னை பொது அஞ்சல் நிலையம், சென்னை 600001 என்ற முகவரிக்கு 13-12-23 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ அனுப்ப வேண்டும்.

புகார் குறித்த தபால் அனுப்பும் பட்சத்தில், அந்த தபால் அனுப்பப்பட்ட தேதி, அனுப்பபட்ட நேரம், அனுப்பப்பட்டவரின் முழு முகவரி, தபாலை பெற்றவரின் முழு முகவரி, பதிவு தபாலின் ரசீது எண் மற்றும் தேதி , எம்ஓ, விபி, பதிவு தபால், காப்பீடு அல்லது விரைவு தபால் ஆகியவற்றை பதிவு செய்து அனுப்பிய அலுவலகம் ஆகியவை குறித்தும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

சேமிப்புதிட்டங்கள், தபால் லைஃப் இன்ஷூரன்ஸ் அல்லது ஊரக அஞ்சல் காப்பீடு ஆகியவை குறித்த புகார் எனில் கணக்கு வைத்திருப்பவரின் , காப்பீடு எடுத்தவரின் கணக்கு எண், பாலிசி எண், பெயர், முழு முகவரி, தபால் அலுவலகத்தின் பெயர் மற்றும் தபால் துறையால் அளிக்கப்பட்ட குறிப்புகளை அளிக்க வேண்டும்.

இது போன்ற புகார்கள் ஏற்கனவே தபால் அலுவலகங்களில் கீழ் மட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டும், அது புகார் தாரருக்கு திருப்தி அளிக்காத பட்சத்தில் அந்தப் புகார்கள் அஞ்சல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும். நீதிமன்றத்தில் புதிய புகார்கள் எடுத்துக் கொள்ளப்படாது.

புகார்களை பதிவு தபால் அல்லது சாதாரண தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும். குறைகள் குறித்து தனியார் கொரியர் மூலம் அனுப்பினால் அது ஏற்றுக் கொள்ளப்படாது. அனுப்பப்படும் புகாரின் கவரில் “DIVISION DAK ADALAT, CHENNAI GPO” என்று குறிப்பிடப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: POST OFFICE
ShareTweetSendShare
Previous Post

“PMGSY திட்டத்தில் உதம்பூர் முதல் 3 இடங்களில் உள்ளது”- மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்!

Next Post

காந்தியின் கொள்கையை கடைப்பிடிப்பவர் பிரதமர் மோடிதான்: ராஜ்நாத் சிங் புகழாரம்!

Related News

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies