எந்த மாநிலத்துக்கும் ஜி.எஸ்.டி. பாக்கி இல்லை: நிர்மலா சீதாராமன் உறுதி!
Jul 26, 2025, 12:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எந்த மாநிலத்துக்கும் ஜி.எஸ்.டி. பாக்கி இல்லை: நிர்மலா சீதாராமன் உறுதி!

Web Desk by Web Desk
Dec 13, 2023, 01:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எந்த மாநிலத்துக்கும் ஜி.எஸ்.டி. பாக்கி நிலுவையில் இல்லை. கணக்காயரின் சான்றிதழ் இல்லாவிட்டால், நாங்கள் தொகையை விடுவிக்க முடியாது. எனவே, மத்திய அரசு தரப்பில் ஜி.எஸ்.டி. பாக்கி நிலுவையில் இருப்பதாக கூறுவது சரியல்ல என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில், கேள்வி நேரத்தின்போது, பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களும் பல்வேறு அமைச்சகங்கள் தொடர்பான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதற்கு, அந்தந்தத் துறைகளின் அமைச்சர்கள் பதிலளித்து வருகிறார்கள்.

அந்த வகையில், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சாகேத் கோகலே, மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, மேற்கு வங்காளத்துக்கு ஜி.எஸ்.டி. பாக்கி வைத்திருப்பது ஏன்? என்று துணைக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “எந்த மாநிலத்துக்கும் ஜி.எஸ்.டி. பாக்கி நிலுவையில் இல்லை. ஜி.எஸ்.டி. தொகையை விடுவிப்பதற்கு பொது கணக்காயரின் சான்றிதழ் கட்டாயம். அந்த சான்றிதழ் இல்லாவிட்டால், நாங்கள் தொகையை விடுவிக்க முடியாது. எனவே, மத்திய அரசுத் தரப்பில் ஜி.எஸ்.டி. பாக்கி நிலுவையில் இருப்பதாக கூறுவது சரியல்ல. அது தவறான வார்த்தை.

எந்தெந்த மாநிலங்கள் பொது கணக்காயர் சான்றிதழை அனுப்பவில்லை என்று பெயர் குறிப்பிட்டே சொல்கிறேன். அப்போதுதான் மக்கள் மனதில் சந்தேகம் எழாது. மேற்கு வங்க மாநிலம் 2019 – 2020-ம் நிதியாண்டுக்கான சான்றிதழ் முதல் 2022 – 2023-ம் நிதியாண்டின் முதல் காலாண்டு வரையிலான சான்றிதழ் அனுப்பவில்லை. ஆகவே, அம்மாநிலத்துக்கு பாக்கித்தொகை விடுவிக்கப்படவில்லை. முதலில், சான்றிதழ் அனுப்பட்டும். பிறகு நாங்கள் விடுவிக்கிறோம்.

அதேசமயம், கேரள மாநிலம் சான்றிதழ் அனுப்பி வைத்தபோதிலும், புள்ளிவிவரங்களை சரிபார்க்கும் வரை தொகையை விடுவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. எனவே, மத்திய அரசுத் தரப்பில் நிலுவை வைக்கவில்லை. 2022 – 2023-ம் நிதியாண்டுக்கான பொது கணக்காயர் சான்றிதழை கர்நாடகாவைத் தவிர வேறு எந்த மாநிலமும் அனுப்பவில்லை” என்றார்.

மேலும், ”கைது செய்யும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஜி.எஸ்.டி. அதிகாரிகள் வியாபாரிகளிடம் வரம்புமீறி நடந்து கொண்டால், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Tags: finance ministerNo DuesgstNirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு!

Next Post

நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்கிய இரண்டு நபர்கள்!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies