மக்களவைத் தாக்குதல்: அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம்... சபாநாயகர் அழைப்பு!
Aug 7, 2025, 10:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவைத் தாக்குதல்: அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம்… சபாநாயகர் அழைப்பு!

Web Desk by Web Desk
Dec 13, 2023, 04:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவையில் நடந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்திருக்கிறார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று நாடாளுமன்றத் தாக்குதல் நடந்த 22-வது நினைவு தினம் என்பதால், மத்திய அமைச்சர்கள் பலரும் தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் டெல்லி போலீஸாருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

இதையடுத்து, மக்களவையில் இன்று வழக்கமான அலுவல்கள் நடந்து கொண்டிருந்தன. அப்போது, பார்வையாளர்கள் அரங்கில் இருந்து அவைக்குள் குதித்த 2 பேர், கோஷமிட்டுக் கொண்டே சபாநாயகரின் இருக்கையை நோக்கி ஓடி வந்தனர்.

மேலும், கையில் வைத்திருந்த புகைக் குண்டுகளையும் வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியேறியது. இதைக்கண்டு அச்சமடைந்த சில எம்.பி.க்கள் ஓட முயன்றனர். அதேசமயம், சில எம்.பி.க்கள் துணிச்சலாக மர்ம நபர்கள் இருவரையும் பிடித்து சபைப் பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.

அதே சமயத்தில், நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வெளியேயும் 2 பேர் கோஷங்களை எழுப்பி க்கொண்டே “கலர்” புகைக் குண்டுகளை வீசினர். அந்த 2 பேரையும் வெளியே இருந்த காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். நாடாளுமன்றத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரான சீக்கியர்களுக்கான நீதி என்கிற அமைப்பின் தலைவர் குர்பந்த்வத் சிங், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, வரும் டிசம்பர் 13-ம் தேதியும், இந்திய நாடாளுமன்றம் அதிரும் என்று மிரட்டல் விடுத்திருந்தார். ஆகவே, இந்த விவகாரத்தில் குர்பந்த்வத் சிங்கின் தொடர்பு இருக்குமா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், “நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியேயும் உள்ளேயும் வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பில் நடந்திருக்கும் குளறுபடிகள் மற்றும் குறைபாடுகள் குறித்து முழு விசாரணை நடக்கிறது.

மேலும், இன்று அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அவர்கள் அனைவரிடமும் கருத்துக் கேட்கப்படும். இச்சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறையும், மக்களவையும் தனித்தனியே விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அதேசமயம், மர்ம நபர்கள் வீசிய குண்டுகளும், அதிலிருந்து வெளியே வந்த வர்ண புகையும் ஆபத்தில்லாதது என்பது தெரியவந்திருக்கிறது. வெறும் பரபரப்புக்காக அவர்கள் இதை வீசி இருப்பதாகத் தெரிகிறது. எனினும், இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.

Tags: Parliamentom birlaattackAll party meetingLoksaba Speaker
ShareTweetSendShare
Previous Post

மகாதேவ் சூதாட்ட செயலியின் உரிமையாளர் கைது: இந்தியா கொண்டுவர நடவடிக்கை!

Next Post

2 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் ஆப்டிகல் ஃபைபர் இணைப்பு!

Related News

பொது இடங்களில் கொடிக் கம்பங்கள் அகற்றம் தொடர்பான வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

கோவில் திருவிழா அனுமதி விவகாரம் –  காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

போலீஸ் என கூறி நாம் தமிழர் கட்சி பெண் நிர்வாகியை ஏமாற்ற முயற்சி – காவல்துறை விசாரணை!

SSI சண்முகவேல் கொலை விவகாரம் – தலைமறைவாக இருந்ததாக கூறப்படுபவர் சுட்டுக்கொலை!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் கூடுதல் வரி – ட்ரம்ப் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடி மாத வளர்பிறை பிரதோஷம் – சிவாலயங்களில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

இந்து மதம் உலகிற்கு தேவை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

டெல்​லி​யில் கடமை பாதை அருகே கட்​டப்​பட்டுள்ள புதிய கர்​தவ்ய பவன் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

அஜித் குமார் கொலை வழக்கு – 5 தனிப்படை காவலர்களுக்கு 13-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திருப்பூர் அருகே கொலை செய்யப்பட்ட SSI உடலுக்கு டிஜிபி நேரில் அஞ்சலி – அரசு மரியாதையுடன் தகனம்!

கவின் கொலை வழக்கு – சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனுத் தாக்கல்!

கவின் ஆணவப் படுகொலை வழக்கு – பாளையங்கோட்டை போலீசார் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்!

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் – விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு!

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 % வரி நியாயமற்றது – ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்தியாவின் இறக்குமதி பொருட்கள் மீதான வரி மேலும் 25 % அதிகரிப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies