நாடாளுமன்ற பாதுகாப்பு நடைமுறை: புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
Jul 29, 2026, 11:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற பாதுகாப்பு நடைமுறை: புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 14, 2023, 07:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவையில் இன்று அத்துமீறல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்ற பாதுகாப்பு நடைமுறைகளில் அதிரடியாக மாற்றம் கொண்டு வரப்பட்டு, புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தற்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடந்து வருகிறது. இந்த சூழலில், இன்று நடந்த கூட்டத்தொடரின்போது மக்களவை பார்வையாளர்கள் அரங்கில் இருந்த 2 பேர் அத்துமீறி எம்.பி.க்கள் பகுதிக்குள் குதித்தனர்.

மேலும், சபாநாயகர் இருக்கையை நோக்கி ஓடிய இருவரையும், எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தினர். உடனே, தாங்கள் வைத்திருந்த புகைக் குண்டுகளை அரங்குக்குள் வீசினர். இதிலிருந்து மஞ்சள் கலரில் கிளம்பிய புகை, எம்.பி.க்களின் கண்களில் எரிச்சலூட்டியது.

பின்னர், பிடிபட்ட 2 பேரையும், அவைப் பாதுகாவலர்களிடம் எம்.பி.க்கள் ஒப்படைத்தனர். விசாரணையில் மக்களவைக்குள் நுழைந்தவர்களில் ஒருவர் கர்நாடகா மாநிலம் மைசூரைச் சேர்ந்த பிரதாப் சிம்ஹா என்பது தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

தவிர, நாடாளுமன்றத்துக்கு வெளியே நின்றிருந்த இருவரும் இதேபோல கையில் வைத்திருந்த புகைக் குண்டுகளை வீசி இருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். இச்சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற பாதுகாப்பு நடைமுறைகளில் அதிரடியாக மாற்றம் கொண்டு வரப்பட்டு, புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, இனி நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவு வாயிலில் எம்.பி.க்களுக்கு மட்டுமே உள்ளே வர அனுமதி அளிக்கப்படும்.

எம்.பி.க்களின் உதவியாளர்கள் யாரும் பிரதான நுழைவு வாயிலில் வர அனுமதியில்லை. மேலும், விமான நிலையங்களின் நுழைவு வாயிலில் விமானப் பயணிகளின் உடமைகளை சோதனையிடும் ஸ்கேன் மிஷின் இருப்பதுபோல நாடாளுமன்ற நுழைவு வாயிலிலும் ஸ்கேன் மிஷின் பொருத்தப்படும்.

பார்வையாளர்கள் மாடத்தில் கண்ணாடித் தடுப்புகள் பொருத்தப்படும். நாடாளுமன்ற அலுவலர்கள், செய்தியாளர்கள் தனிப் பாதையில் வர வேண்டும். பார்வையாளர்கள் காலதாமத்துடன் வந்தால், அதற்கான தனிப் பாதை வழியாக வரவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கூடுதலாக பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவர் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

Tags: ParliamentSecurity
ShareTweetSendShare
Previous Post

ஜொலிக்கும் அயோத்தி விமான நிலையம்!

Next Post

இங்கிலாந்து ரயில் பணியாளர் விருதை வென்ற முதல் பிரிட்டிஷ் இந்தியர் !

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies