இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய அங்கமாக விண்வெளித்துறை மாறி வருகிறது! - டாக்டர் ஜிதேந்திர சிங்
Jul 25, 2025, 07:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய அங்கமாக விண்வெளித்துறை மாறி வருகிறது! – டாக்டர் ஜிதேந்திர சிங்

Web Desk by Web Desk
Dec 14, 2023, 03:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியப் பொருளாதாரத்தில் விண்வெளித்துறை ஒரு முக்கிய அங்கமாக மாறி வருகிறது என்று பிரதமர் அலுவலக பணியாளர், நலன் மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை,  இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தெரிவித்தார்.

ஏப்ரல் முதல் நடப்பு நிதியாண்டில் விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ரூ.1,000 கோடிக்கு மேல் முதலீட்டை ஈர்த்துள்ளன என்று தேசிய தொலைக்காட்சி மாநாட்டில் பங்கேற்ற மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் இன்று சுமார் 8 பில்லியன் டாலராக உள்ளது. ஆனால் 2040 ஆம் ஆண்டில் இது பன்மடங்கு பெருகும் என்பது இந்தியாவின் கணிப்பு. ஆனால் இன்னும்  சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சில சர்வதேச பார்வையாளர்களின் கூற்றுப்படி, எடுத்துக்காட்டாக, சமீபத்திய ஏ.டி.எல் (ஆர்தர் டி லிட்டில்) அறிக்கையின்படி 2040-க்குள் 100 பில்லியன் டாலர் திறனைக் கொண்டிருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இஸ்ரோ இதுவரை 430 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் 290 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாகவும், அமெரிக்க செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் 170 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாகவும் இஸ்ரோ வருவாய் ஈட்டியுள்ளது என்று கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி விண்வெளித் துறையில் சீர்திருத்தங்களைத் தொடங்கியதிலிருந்து இந்தியாவில் விண்வெளித் துறை ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என்று கூறினார்.

வெறும் நான்கு ஆண்டுகளுக்குள், விண்வெளித் துறையில் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலிருந்து 1180 ஆக உயர்ந்துள்ளது. அதில் சில நிறுவனங்கள் லாபகரமான தொழில் நிறுவனங்களாக மாறியுள்ளன.

“தோல்வியுற்ற ரஷ்ய நிலவு திட்டத்திற்கு ரூ.16,000 கோடி   செலவானது.  சந்திரயான் -3 திட்டத்திற்கு சுமார் ரூ.600 கோடி மட்டுமே செலவானது” என்று அவர் கூறினார்.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் கடந்த ஒன்பது   ஆண்டுகளில், குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் முன்னேறியுள்ளன, மேலும் அவை உலகெங்கிலும் பாராட்டப்படுகின்றன என்று கூறினார்.

Tags: ISROjitendra singh
ShareTweetSendShare
Previous Post

2029இல் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்!

Next Post

ஜோதிமணி உட்பட 14 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies