நாடாளுமன்றத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: அதிக கேமராக்கள் பொருத்தம்!
Mar 15, 2026, 06:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்றத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: அதிக கேமராக்கள் பொருத்தம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 14, 2023, 04:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கூடுதல் கேமராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து, கடுமையான பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்ததாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், நாடாளுமன்றத்துக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பில் இருந்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது, நாடாளுமன்றத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்படி, நாடாளுமன்றத்துக்குள் செல்பவர்கள் முதலில் வரவேற்பு அறையில் தங்களை பதிவு செய்ய வேண்டும். அப்போது, அவர்களிடம் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்படும்.

இதன் பிறகு, பார்வையாளர்கள் அடையாள அட்டை, கைப்பை, போன் போன்றவை ஆய்வு செய்யப்படும். அதேசமயம், போன் மற்றும் பைகளை உள்ளே எடுத்துச்செல்ல அனுமதிக்க மாட்டார்கள். 2-வது கட்ட பாதுகாப்பில், பார்வையாளர்களின் நுழைவுச் சீட்டு ஸ்கேன் செய்து ஆய்வு செய்யப்படும்.

மேலும், பார்வையாளர்கள் அடையாள அட்டை உண்மையானதுதானா என்பதும் பரிசோதிக்கப்படும். மீண்டும் மெட்டல் டிடெக்டர் மூலம் பார்வையாளர்களை சோதனை செய்வார்கள். 3-வது கட்டமாக நாடாளுமன்றத்தின் முக்கிய நுழைவு வாயிலுக்கு பார்வையாளர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

அங்கும் மெட்டல் டிடெக்டர் மூலமாக சோதனை செய்யப்படும். பார்வையாளர்களின் நுழைவுச் சீட்டு மீண்டும் கடுமையாக ஆய்வு செய்யப்படும். 4-வது கட்டமாக பார்வையாளர்கள் நாடாளுமன்ற மாடத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அதற்கு முன்னதாக மீண்டும் ஒருமுறை பார்வையாளர்கள் சோதிக்கப்படுவார்கள்.

இந்த 4 கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கடந்துதான் நாடாளுமன்றத்துக்குள் பார்வையாளர்கள் செல்ல முடியும். இந்த 4 கட்ட சோதனைகளையும் தாண்டி 2 இளைஞர்கள் புகைக் குண்டுகளை கொண்டு சென்று தாக்குதல் நடத்தியதுதான் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

எனவே, நாடாளுமன்றத்துக்கான பாதுகாப்பு இன்று முதல் மேலும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே, இந்த கூட்டத்தொடரில் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருப்பதோடு, மக்களவை, மாநிலங்களவையின் பார்வையாளர் மாடமும் மூடி சீல் வைக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, பார்வையாளர்களுக்கு நுழைவுச் சீட்டு வழங்குவதும் தடை செய்யப்பட்டிருக்கிது. நாடாளுமன்ற வளாகத்திலும், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் பாதுகாவலர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு, பாதுகாப்பு ஏற்பாடுகளில் இனி எந்தக் குறையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சில புதிய பாதுகாப்பு அம்சங்களும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அதன்படி, விமான நிலையங்களைப் போல முழு உடல் பரிசோதனைக்கான ஸ்கேனர் கருவிகள், இயந்திரங்கள் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ளது.

தவிர, பார்வையாளர்கள் அனைவரையும் இனி முழுமையாக சோதிக்க, கூடுதல் பாதுகாப்பு படையினரை பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எம்.பி.க்கள் இருக்கைக்கும், பார்வையாளர்களின் மாடத்துக்கும் இடையே கண்ணாடி தடுப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், நாடாளுமன்றத்துக்குள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் நுழைய தனி வழி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற ஊழியர்கள், செய்தியாளர்கள் தனி வழியில் செல்ல முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, அமைச்சர்களின் உதவியாளர்களையும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, நாடாளுமன்றத்துக்குள் வருபவர்களை கண்காணிக்க, ஏற்கெனவே கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதன் மூலம், நாடாளுமன்றத்துக்குள் வரும் ஒவ்வொருவரையும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

Tags: ParliamentincreaseSecurity
ShareTweetSendShare
Previous Post

பொதுமக்களின் உழைப்பை சுரண்டும் ஊழல் திமுக அரசு! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் மீது வழக்குப்பதிவு – ED அதிரடி!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies