ஒடிசா சர்வதேச பேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்குள் இந்தியர்கள்!
Mar 15, 2026, 01:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒடிசா சர்வதேச பேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்குள் இந்தியர்கள்!

Murugesan M by Murugesan M
Dec 17, 2023, 01:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கட்டாக்கில் நடைபெற்று வரும் ஒடிசா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்தியா 4 பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

கட்டாக்கில் ஒடிசா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு பேட்மிட்டன் என இரண்டு பிரிவிலும் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறவுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவிலும் இந்தியா இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு :

நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி இந்தோனேசிய வீரர் ஆல்வி பர்ஹானுடன் விளையாடினார்.

இதில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி 19-21, 21-14, 22-20 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் ஆல்வி பர்ஹானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

அதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் சதீஷ் குமார் மற்றும் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் விளையாடினர். இதில் சதீஷ் குமார் 21-18, 21-14 என்ற நேர்செட்டில் நடப்பு சாம்பியன் கிரண் ஜார்ஜை தோற்கடித்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இரண்டு இந்திய வீரர்களான ஆயுஷ் ஷெட்டி-சதீஷ் குமார் விளையாடவுள்ளனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு :

நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியா அணியின் கிருஷ்ணபிரசாத்-சாய் பிரதீக் கூட்டணி இந்தோனேசியாவின் டிஜெஸ் சட்ரியாஜி-கிறிஸ்டோபர் டேவிட் அவர்களை எதிர்கொண்டது.

இப்போட்டியில் இந்திய வீரர்கள் 21-17, 17-21, 21-18 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் டிஜெஸ் சட்ரியாஜி-கிறிஸ்டோபர் டேவிட் ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.

பெண்கள் இரட்டையர் பிரிவு :

நேற்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியா அணியில் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ இணை இந்தோனேசியாவின் அர்ல்யா நபிலா-அக்னியா ஸ்ரீ ரஹாயூ இணையை எதிர்கொண்டது.

இதில் இந்திய அணியின் வீரர்கனைகள் 21-17, 21-13 என்ற நேர்செட்டில் இந்தோனேசியாவின் அர்ல்யா நபிலா-அக்னியா ஸ்ரீ ரஹாயூ இணையை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

கலப்பு இரட்டையர் பிரிவு :

கலப்பு இரட்டையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் துருவ் கபிலா-தனிஷா கிரஸ்டோ ஆகியோர் டென்மார்க் அணியின் மாட்ஸ் வெஸ்டெர்கார்ட்-கிறிஸ்டின் புஸ்ச் இணையை எதிர்கொண்டது.

இதில் இந்திய அணியின் வீரர்கள் 21-14, 21-14 என்ற நேர்செட்டில் டென்மார்க்கின் மாட்ஸ் வெஸ்டெர்கார்ட்-கிறிஸ்டின் புஸ்ச் ஜோடியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு :

பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் உன்னதி ஹூடா உலக சாம்பியனான ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹராவுடன் விளையாடினார்.

இதில் இந்திய வீராங்கனை 16-21, 5-21 என்ற நேர்செட்டில் முன்னாள் உலக சாம்பியன் நஜோமி ஒகுஹராவிடம் தோல்வியை சந்தித்தார்.

Tags: badmintonindia final
ShareTweetSendShare
Previous Post

சமூகவலைத்தளத்தில் இருந்து ஓய்வெடுக்கும் லோகேஷ் கனகராஜ் – காரணம் என்ன?

Next Post

சத்தீஸ்கர்: நக்சல் தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப். எஸ்.ஐ. பலி!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies