ஒடிசா சர்வதேச பேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்குள் இந்தியர்கள்!
Sep 14, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒடிசா சர்வதேச பேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்குள் இந்தியர்கள்!

Murugesan M by Murugesan M
Dec 17, 2023, 01:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கட்டாக்கில் நடைபெற்று வரும் ஒடிசா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்தியா 4 பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

கட்டாக்கில் ஒடிசா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு பேட்மிட்டன் என இரண்டு பிரிவிலும் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறவுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவிலும் இந்தியா இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு :

நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி இந்தோனேசிய வீரர் ஆல்வி பர்ஹானுடன் விளையாடினார்.

இதில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி 19-21, 21-14, 22-20 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் ஆல்வி பர்ஹானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

அதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் சதீஷ் குமார் மற்றும் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் விளையாடினர். இதில் சதீஷ் குமார் 21-18, 21-14 என்ற நேர்செட்டில் நடப்பு சாம்பியன் கிரண் ஜார்ஜை தோற்கடித்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இரண்டு இந்திய வீரர்களான ஆயுஷ் ஷெட்டி-சதீஷ் குமார் விளையாடவுள்ளனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு :

நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியா அணியின் கிருஷ்ணபிரசாத்-சாய் பிரதீக் கூட்டணி இந்தோனேசியாவின் டிஜெஸ் சட்ரியாஜி-கிறிஸ்டோபர் டேவிட் அவர்களை எதிர்கொண்டது.

இப்போட்டியில் இந்திய வீரர்கள் 21-17, 17-21, 21-18 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் டிஜெஸ் சட்ரியாஜி-கிறிஸ்டோபர் டேவிட் ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.

பெண்கள் இரட்டையர் பிரிவு :

நேற்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியா அணியில் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ இணை இந்தோனேசியாவின் அர்ல்யா நபிலா-அக்னியா ஸ்ரீ ரஹாயூ இணையை எதிர்கொண்டது.

இதில் இந்திய அணியின் வீரர்கனைகள் 21-17, 21-13 என்ற நேர்செட்டில் இந்தோனேசியாவின் அர்ல்யா நபிலா-அக்னியா ஸ்ரீ ரஹாயூ இணையை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

கலப்பு இரட்டையர் பிரிவு :

கலப்பு இரட்டையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் துருவ் கபிலா-தனிஷா கிரஸ்டோ ஆகியோர் டென்மார்க் அணியின் மாட்ஸ் வெஸ்டெர்கார்ட்-கிறிஸ்டின் புஸ்ச் இணையை எதிர்கொண்டது.

இதில் இந்திய அணியின் வீரர்கள் 21-14, 21-14 என்ற நேர்செட்டில் டென்மார்க்கின் மாட்ஸ் வெஸ்டெர்கார்ட்-கிறிஸ்டின் புஸ்ச் ஜோடியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு :

பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் உன்னதி ஹூடா உலக சாம்பியனான ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹராவுடன் விளையாடினார்.

இதில் இந்திய வீராங்கனை 16-21, 5-21 என்ற நேர்செட்டில் முன்னாள் உலக சாம்பியன் நஜோமி ஒகுஹராவிடம் தோல்வியை சந்தித்தார்.

Tags: badmintonindia final
Share
Tweet
SendShare
Previous Post

சமூகவலைத்தளத்தில் இருந்து ஓய்வெடுக்கும் லோகேஷ் கனகராஜ் – காரணம் என்ன?

Next Post

சத்தீஸ்கர்: நக்சல் தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப். எஸ்.ஐ. பலி!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies