டெல்லியில் நடந்த உலக அமைதி குறித்த கூட்டத்தில் ஹிந்து மதத் தலைவரின் பாதங்களைத் தொட்டு ஈரான் அதிபர் பெசெஷ்கியான் ஆசி பெற்ற வீடியோ இணையத்தில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிக்ஸ் 2026 மாநாட்டில் பங்கேற்கபதற்காக டெல்லிக்கு வருகை தந்துள்ள ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் குடியரசு தலைவர் மாளிகையை பார்வையிட்டார். அப்போது, 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஈரானை ஆட்சி செய்த ஃபத்-அலி ஷா கஜார் மன்னரின் காலத்தைச் சேர்ந்த கலைப்படைப்புகள் மற்றும் ஓவியங்கள் குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள அறையில் இடம்பெற்றிந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தார்.
தாய்நாட்டில் இருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தியாவின் குடியரசுத் தலைவர் மாளிகையில் தனது நாட்டின் பழமையான கலை மற்றும் வரலாற்றுச் சுவடுகளை கண்டு வியப்படைந்ததாக பெசெஷ்கியான் தெரிவித்தார்.
இதனிடையே, டெல்லியில் சனாதன ஆன்மீகம் மற்றும் உலக அமைதி குறித்து கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து, சீக்கிய, சமண, பௌத்த மற்றும் இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஈரான் அதிபர் பெசெஷ்கியான், இந்து மதத் தலைவர் ஒருவரின் உரையை கேட்டறிந்தார்.
பின்னர், அந்தத் துறவியின் பாதங்களைத் தொட்டு அவர் ஆசி பெற்றார். மத நல்லிணக்கம், பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பர புரிதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பெசெஷ்கியான், போர் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக மனிதகுலம் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்தார். இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
















