உலகப் பிரசித்திபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில், விநாயகர் சதுர்த்தி விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோயிலில் ஆவணி மாதம் நடைபெறும் 10 நாள் விநாயகர் சதுர்த்தி பெருந்திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் சிகர நிகழ்வான ஒன்பதாம் நாளில் தேரோட்டம் நடைபெற்றது. மூலவர் கற்பக விநாயகருக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சாத்தப்படும் மிக அபூர்வமான சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். விநாயகர் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட திருத்தேரில் எழுந்தருள, திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர்.
















