இங்கிலாந்தில் உள்ள லாஃப்பரோ பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ஜி.எஸ்.பாட்டியா என்ற இந்திய மாணவர், கிழக்கு லண்டனில் இருந்து கடந்த 15-ம் தேதி முதல் மாயமானார்.
இதையடுத்து, பா.ஜ.க. தேசியச் செயலாளர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, இச்சம்பவம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கவனத்திற்கு கொண்டு சென்று உதவி கோரியிருக்கிறார்.
இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.பாட்டியா என்கிற மாணவர் லாஃப்பரோ பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். லண்டனில் தங்கி இருந்த இவர், தினமும் காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில், கடந்த 15-ம் தேதி நடைப்பயிற்சிக்குச் சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, பா.ஜ.க. தேசியச் செயலாளர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, பாட்டியாவை கண்டுபிடிக்க உதவுமாறு, லாஃப்பரோ பல்கலைக்கழகம் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளை வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து மஞ்சிந்தர் சிங் சிர்சா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
அப்பதிவில், “லாஃப்பரோ பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ஜி.எஸ்.பாட்டியா என்கிற இந்திய மாணவரை கடந்த 15-ம் தேதி முதல் காணவில்லை. பாட்டியாவை நான் கடைசியாக கிழக்கு லண்டனின் கேனரி வார்ஃப் பகுதியில் பார்த்தேன். ஆகவே, அவரை கண்டுபிடிக்க உதவுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், லாஃப்பரோ பல்கலைக்கழகம், லண்டனிலுள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றை டேக் செய்திருக்கிறார்.
மேலும், அப்பதிவில், பாட்டியாவின் குடியிருப்பு அனுமதி அட்டை மற்றும் கல்லூரி அடையாள அட்டைகளை ஆகியவற்றையும் பகிர்ந்திருக்கும் மஞ்சிந்தர் சிங் சிர்சா, இந்திய மாணவர் பற்றிய தகவல்களை வழங்க 2 தொடர்பு எண்களையும் கொடுத்திருக்கிறார்.
மஞ்சிந்தர் சிங்கின் இப்பதிவிற்கு பதிலளித்திருக்கும் பல்கலைக்கழகத்தின் முதன்மை இயக்குனர், இதுகுறித்து காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியிருக்கிறது.
ஏற்கெனவே இங்கிலாந்துக்கு படிக்கச் சென்ற மாணவர் மித்குமார் படேல், கடந்த நவம்பர் 17-ம் தேதி மாயமான நிலையில், 21-ம் தேதி கேனரி வார்ஃப் பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். ஆனால், இவரது மரணம் சந்தேகத்திற்குரியதாக இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
G S Bhatia, a student of Loughborough University, has been missing since Dec 15. Last seen in Canary Wharf, East London.
Bringing to the kind attention of @DrSJaishankar Ji
We urge @lborouniversity & @HCI_London to join efforts in locating him. Your assistance is crucial. Please… pic.twitter.com/iFSqpvWVV8— Manjinder Singh Sirsa (@mssirsa) December 16, 2023