பிணைக் கைதிகளை மீட்க புதிய பேச்சுவார்த்தையா? இஸ்ரேல் பிரதமர் விளக்கம்!
Jul 26, 2025, 05:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிணைக் கைதிகளை மீட்க புதிய பேச்சுவார்த்தையா? இஸ்ரேல் பிரதமர் விளக்கம்!

Web Desk by Web Desk
Dec 18, 2023, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஸாவில் ஹமாஸ் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பிணைக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தைகள் கத்தார் மத்தியஸ்தத்தில் நடந்து வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்மூடித்தனமாக அப்பாவி மக்களை சுட்டுக் கொலை செய்தனர்.

அதோடு, சுற்றுலா வந்த வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். ஹமாஸ் தீவிரவாதிகளின் இத்தாக்குதலில் இஸ்ரேலில் 1,400 பேர் உயிரிழந்த நிலையில், 3,500 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் தொடங்கியது. அன்று தொடங்கிய தாக்குதல் இன்று வரை நிற்கவே இல்லை. முப்படைகளையும் ஏவிவிட்டு நடத்திவரும் தாக்குதலில், காஸா நகரமே உருக்குலைந்து கிடக்கிறது. ஹமாஸ் தலைமையகம் உட்பட பல்வேறு கட்டடங்கள் தரைமட்டமாகி விட்டன.

இதனிடையே, பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக, கத்தார் நாட்டு உதவியுடன் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையில் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் 7 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. எனினும், இதன் பிறகு இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கி இருக்கிறது.

இந்த நிலையில், 2-வது கட்டமாக பிணைக் கைதிகள் விடுவிப்பு தொடர்பாக கத்தார், எகிப்பது நாடுகளின் உதவியுடன் அமெரிக்கா மீண்டும் முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதை இஸ்ரேல் பிரதமரும் உறுதி செய்திருக்கிறார்.

இஸ்ரேலில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, மொசாட் தலைவர் டேவிட் பர்னியா மற்றும் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி ஆகியோர் ஐரோப்பாவில் சந்தித்துக் கொண்டது குறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இக்கேள்வியை நெதன்யாகு புறக்கணித்தாலும், “எங்களுக்கு கத்தார் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. அதைப் பற்றி சரியான நேரத்தில் நீங்கள் கேட்பீர்கள் என்று நினைக்கிறேன். இருப்பினும் பிணைக் கைதிகளை முழுவதுமாக மீட்க முயற்சிக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம், பேச்சுவார்த்தைகள் தொடர்பான கூடுதல் தகவல்களை வழங்க நெதன்யாகு மறுத்து விட்டார். எனினும், இஸ்ரேலைச் சேர்ந்த 3 பிணைக் கைதிகளை தவறுதலாக சுட்டுக் கொன்றது தொடர்பாக, அந்நாட்டில் வெடித்த போராட்டத்தின் எதிர்விளைவாக இஸ்ரேல் இம்முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

எனினும், மற்றொரு கேள்விக்கு பதிலளித்த நெதன்யாகு, “நாங்கள் எங்கள் இருப்புக்கான ஒரு போரில் இருக்கிறோம். சர்வதேச அழுத்தங்கள் மற்றும் தாங்க முடியாத பொருட்செலவுகளை தாண்டி, வீழ்ந்த இந்நாட்டின் மகன்கள் மற்றும் மகள்களுக்காக வெற்றி வரை போரை தொடர வேண்டும்” என்றார்.

Tags: IsraelHamasPM NetanyaguhostagesNew negotiations
ShareTweetSendShare
Previous Post

வாஜ்பாயை மிஸ் பண்ணுறேன்: ஜெக்தீப் தன்கர் உருக்கம்!

Next Post

140 கோடி மக்களும் உறுதி எடுத்தால் 2047இல் நாட்டின் வளர்ச்சி உறுதி : பிரதமர் மோடி

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies