வாஜ்பாயை மிஸ் பண்ணுறேன்: ஜெக்தீப் தன்கர் உருக்கம்!
Jan 14, 2026, 08:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாஜ்பாயை மிஸ் பண்ணுறேன்: ஜெக்தீப் தன்கர் உருக்கம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 18, 2023, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 1990-ல் நான் மத்திய அமைச்சராக இருந்தபோது, வாஜ்பாயுடன் 15 நாட்கள் ஐரோப்பிய பயணம் மேற்கொண்டேன். தற்போது, அடல்ஜியை நான் மிகவும் மிஸ் செய்கிறேன் என்று குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான ஜெக்தீப் தன்கர் உருக்கத்துடன் கூறியிருக்கிறார்.

மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த சூழலில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் அடல் ஆரோக்கிய கண்காட்சி  தொடங்கியது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான ஜெக்தீப் தன்கர் வருகை தந்தார். அவரை மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக், முன்னாள் துணை முதல்வர் தினேஷ் ஷர்மா, நாடாளுமன்ற உறுப்பினர் சுதன்ஷு திரிவேதி மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நீரஜ் சிங் ஆகியோர் வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், “இந்தியாவின் பொருளாதாரம் கனடா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது. இன்று நாம் பொருளாதாரத்தில் உலகின் 5-வது பெரிய வல்லரசாக இருக்கிறோம்.

அடுத்த 4, 5 ஆண்டுகளில் ஜெர்மனி, ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் 3-வது பெரிய வல்லரசு நாடாக இந்தியா உருவெடுக்கும். ஆனால், அதை அடைய நாட்டின் குடிமக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

எவ்வளவுதான் திறமை இருந்தும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் எதுவும் செய்ய முடியாது. நமது வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தனது கொள்கைகளில் உறுதியாக இருந்தார். முக்கியமான பிரச்சனைகளை கவனமாகக் கையாண்டார். தற்போது வாஜ்பாய் இருந்திருந்தால், இந்தியா இன்று அடைந்திருக்கும் நிலையைப் பார்த்து மிகவும் பெருமைப்பட்டிருப்பார்.

1990 முதல் 1991 வரை பிரதமராக இருந்த சந்திரசேகர் அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சராக பதவி வகித்தேன். அப்போது, எங்களது அரசுக்கு பா.ஜ.க.வின் ஆதரவு இருந்தது.

மேலும், ஒரு அமைச்சராக ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்குச் செல்லும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அப்போது, ஐரோப்பாவில் வாஜ்பாயுடன் 15 நாட்கள் பயணம் செய்தேன். தற்போது, அடல்ஜியை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். கண்டிப்பாக அவரை மிஸ் செய்கிறேன்” என்றார்.

Tags: Vice president of indiaFormer Prime MinisterJagdeep DhankarAdal Bihari Vajpayee
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை நீர்மட்டம் 70.18 அடியாக அதிகரிப்பு!

Next Post

பிணைக் கைதிகளை மீட்க புதிய பேச்சுவார்த்தையா? இஸ்ரேல் பிரதமர் விளக்கம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies