வாஜ்பாயை மிஸ் பண்ணுறேன்: ஜெக்தீப் தன்கர் உருக்கம்!
Oct 26, 2025, 12:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாஜ்பாயை மிஸ் பண்ணுறேன்: ஜெக்தீப் தன்கர் உருக்கம்!

Web Desk by Web Desk
Dec 18, 2023, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 1990-ல் நான் மத்திய அமைச்சராக இருந்தபோது, வாஜ்பாயுடன் 15 நாட்கள் ஐரோப்பிய பயணம் மேற்கொண்டேன். தற்போது, அடல்ஜியை நான் மிகவும் மிஸ் செய்கிறேன் என்று குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான ஜெக்தீப் தன்கர் உருக்கத்துடன் கூறியிருக்கிறார்.

மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த சூழலில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் அடல் ஆரோக்கிய கண்காட்சி  தொடங்கியது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான ஜெக்தீப் தன்கர் வருகை தந்தார். அவரை மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக், முன்னாள் துணை முதல்வர் தினேஷ் ஷர்மா, நாடாளுமன்ற உறுப்பினர் சுதன்ஷு திரிவேதி மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நீரஜ் சிங் ஆகியோர் வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், “இந்தியாவின் பொருளாதாரம் கனடா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது. இன்று நாம் பொருளாதாரத்தில் உலகின் 5-வது பெரிய வல்லரசாக இருக்கிறோம்.

அடுத்த 4, 5 ஆண்டுகளில் ஜெர்மனி, ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் 3-வது பெரிய வல்லரசு நாடாக இந்தியா உருவெடுக்கும். ஆனால், அதை அடைய நாட்டின் குடிமக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

எவ்வளவுதான் திறமை இருந்தும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் எதுவும் செய்ய முடியாது. நமது வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தனது கொள்கைகளில் உறுதியாக இருந்தார். முக்கியமான பிரச்சனைகளை கவனமாகக் கையாண்டார். தற்போது வாஜ்பாய் இருந்திருந்தால், இந்தியா இன்று அடைந்திருக்கும் நிலையைப் பார்த்து மிகவும் பெருமைப்பட்டிருப்பார்.

1990 முதல் 1991 வரை பிரதமராக இருந்த சந்திரசேகர் அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சராக பதவி வகித்தேன். அப்போது, எங்களது அரசுக்கு பா.ஜ.க.வின் ஆதரவு இருந்தது.

மேலும், ஒரு அமைச்சராக ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்குச் செல்லும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அப்போது, ஐரோப்பாவில் வாஜ்பாயுடன் 15 நாட்கள் பயணம் செய்தேன். தற்போது, அடல்ஜியை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். கண்டிப்பாக அவரை மிஸ் செய்கிறேன்” என்றார்.

Tags: Vice president of indiaFormer Prime MinisterJagdeep DhankarAdal Bihari Vajpayee
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை நீர்மட்டம் 70.18 அடியாக அதிகரிப்பு!

Next Post

பிணைக் கைதிகளை மீட்க புதிய பேச்சுவார்த்தையா? இஸ்ரேல் பிரதமர் விளக்கம்!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies