இராமர் கோவில் கும்பாபிஷேகம் : எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி பங்கேற்க வாய்ப்பு இல்லை!
Mar 15, 2026, 08:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் கோவில் கும்பாபிஷேகம் : எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி பங்கேற்க வாய்ப்பு இல்லை!

இராமர் கோவில் அறக்கட்டளை அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 19, 2023, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி  பங்கேற்க வாய்ப்பில்லை என  அறிவிக்கப்பட்டுள்ளது.

இராமர் கோவில் கும்பாபிஷேகம்  அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.  இதுதொடர்பாக இராமர் கோவில் அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது,இராமர் கோவில் கும்பாபிஷேக  விழாவில் பாஜக மூத்த  தலைவர்கள் எல்.கே.அத்வானி,முரளி மனோகர் ஜோஷி பங்கேற்க வாய்ப்பில்லை என தெரிவித்தார். இருவரும் குடும்பத்தின் பெரியவர்கள், அவர்களின் வயதைக் கருத்தில் கொண்டு, அவர்கள் வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும்,  அதை இருவரும் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்து விழாவிற்கு அழைக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அருண் கோவில், திரைப்பட இயக்குநர் மதுர் பண்டார்கர் மற்றும் பிரபல தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, பிரபல ஓவியர்  வாசுதேவ் காமத், இஸ்ரோ இயக்குநர் நிலேஷ் தேசாய் மற்றும் பல பிரபலங்கள் விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் ராய் கூறினார்.

விழாவிற்கு சுமார் 4,000 புனிதர்களும் 2,200  விருந்தினர்களும் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.  அயோத்தியில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விருந்தினர்கள் தங்குவதற்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திரு ராய் கூறினார். இது தவிர, பல்வேறு மடங்கள், கோவில்கள் மற்றும் வீடுகள்  மூலம் 600  அறைகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கும்பாபிஷேகத்திற்குப் பிறகு, ஜனவரி 24 முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை சடங்கு மரபுகளின்படி நடைபெறும் என்றும்,  ஜனவரி 23ஆம் தேதி கோயில் பக்தர்களுக்காக திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Tags: ayodhya ramar temple functionayodhya ramar templeAdvanimurali manokar joshi
ShareTweetSendShare
Previous Post

“மன் கி பாத்”: தகவல்களை பகிர்ந்துகொள்ள நாட்டு மக்களுக்கு பிரதமர் அழைப்பு!

Next Post

ஊழல்வாதிகளின், இந்தி கூட்டணி நடத்தும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies