மொதல்ல இந்தியை கத்துக்கங்க: டி.ஆர்.பாலுவிடம் சீறிய நிதீஷ் குமார்!
Sep 15, 2025, 06:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மொதல்ல இந்தியை கத்துக்கங்க: டி.ஆர்.பாலுவிடம் சீறிய நிதீஷ் குமார்!

Web Desk by Web Desk
Dec 20, 2023, 03:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் நடந்த ‛இண்டி’ கூட்டணிக் கூட்டத்தில், தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலுவிடம் இந்தியைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதீஷ் குமார் கோபத்தை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்கட்சிகள் இணைந்து ‛இண்டி’ என்கிற பெயரில் கூட்டணியை அமைத்திருக்கின்றன. இக்கூட்டணியின் தலைவர்கள் அவ்வப்போது கூடி 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், இக்கூட்டணியின் 4-வது ஆலோசனை கூட்டம் புதுடெல்லியில் நேற்று நடந்தது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் இந்தியில் பேசினார். எனவே, அவரது பேச்சை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறும்படி டி.ஆர்.பாலு, ஐக்கிய ஜனதா தளத்தின் மனோஜ் ஜாவிடம் கூறியிருக்கிறார். அவரும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறினார். இதனால் நிதீஷ்குமார் கோபமடைந்தார்.

“இந்தி இந்தியாவின் தேசிய மொழி. ஆகவே, தி.மு.க. தலைவர்கள் இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும். ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு சென்றபோதே ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்தும் போய்விட்டது” என்று கடுமையாகக் கூறியதோடு, மொழி பெயர்ப்பதை நிறுத்துமாறு மனோஜ் ஜாவுக்கும் உத்தரவிட்டார்.

இதனால் கூட்டணியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு முந்தைய 3 கூட்டங்களிலும் நிதீஷ் குமாரின் பேச்சை மனோஜ் ஜாதான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இதன் காரணமாகவே, இந்த முறையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்படி மனோஜ் ஜாவிடம் டி.ஆர்.பாலு கேட்டிருக்கிறார்.

இக்கூட்டத்தில் நிதீஷ் குமார் அதிருப்தியுடன் காணப்பட்டார். கூட்டம் முடிந்த பிறகு கூட்டணித் தலைவர்கள் அனைவரும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். ஆனால், இதில் நிதீஷ் குமார் பங்கேற்கவில்லை. மேலும், ‘இண்டி’ கூட்டணி பிரதமர் வேட்பாளராக நிதிஷ் குமாரை யாருமே முன்மொழியவில்லை. ஆகவே, இண்டி கூட்டணியில் இருந்து பீகார் மாநிலத்தின் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வெளியேறக் கூடும் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: dmk mpnitish kumarSnapsT.R.Balu
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் 26-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

Next Post

இமயமலையைச் சுற்றி பார்க்க ஆசையா: கைரோகாப்டர் அறிமுகம்!

Related News

முதியவரை காரை ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் : முறைகேட்டை அம்பலப்படுத்தியால் தொடரும் கொடூரம்!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

இந்தியா மீது 50% வரிவிதிப்பு ட்ரம்பின் மாபெரும் தவறு : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கடும் விமர்சனம்!

“உங்களுடன் என்றும் நான் இருப்பேன்” – மணிப்பூர் மக்களை நெகிழ வைத்த பிரதமர் மோடி

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

விதவிதமாய்.. வித்தியாசமாய்… : வடகொரியாவின் வினோத கட்டுப்பாடுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் ஊடுருவிய ஆப்பிரிக்க நத்தைகள் – பெரும் சவாலாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

வரவிருக்கும் பண்டிகைகளுக்குச் சுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து – நீர் கசிவு தான் காரணமா?

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

ஜிஎஸ்டி வரி குறைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி – நிர்மலா சீதாராமன்

மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி – போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!

வரி குறைப்பு : நடுத்தர குடும்பங்களுக்குக் கிடைத்துள்ள வரப் பிரசாதம் – ஐஐடி இயக்குநர் காமகோடி

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் மக்களிடம் வாங்கும் சக்தி கூடும் : நயினார் நாகேந்திரன்

மற்றவரைவிட உயர்ந்தவர் என்று ஒருவர் எண்ணும்போது தான் மோதல்கள் உருவாகின்றன – ஆர்.எஸ்.எஸ் தலைவர்

பழங்குடி சமூகத்திற்கு செய்யப்பட்ட வரலாற்று அநீதியை பாஜக சரிசெய்யும் : பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies