மொதல்ல இந்தியை கத்துக்கங்க: டி.ஆர்.பாலுவிடம் சீறிய நிதீஷ் குமார்!
Mar 15, 2026, 03:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மொதல்ல இந்தியை கத்துக்கங்க: டி.ஆர்.பாலுவிடம் சீறிய நிதீஷ் குமார்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 20, 2023, 03:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் நடந்த ‛இண்டி’ கூட்டணிக் கூட்டத்தில், தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலுவிடம் இந்தியைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதீஷ் குமார் கோபத்தை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்கட்சிகள் இணைந்து ‛இண்டி’ என்கிற பெயரில் கூட்டணியை அமைத்திருக்கின்றன. இக்கூட்டணியின் தலைவர்கள் அவ்வப்போது கூடி 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், இக்கூட்டணியின் 4-வது ஆலோசனை கூட்டம் புதுடெல்லியில் நேற்று நடந்தது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் இந்தியில் பேசினார். எனவே, அவரது பேச்சை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறும்படி டி.ஆர்.பாலு, ஐக்கிய ஜனதா தளத்தின் மனோஜ் ஜாவிடம் கூறியிருக்கிறார். அவரும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறினார். இதனால் நிதீஷ்குமார் கோபமடைந்தார்.

“இந்தி இந்தியாவின் தேசிய மொழி. ஆகவே, தி.மு.க. தலைவர்கள் இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும். ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு சென்றபோதே ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்தும் போய்விட்டது” என்று கடுமையாகக் கூறியதோடு, மொழி பெயர்ப்பதை நிறுத்துமாறு மனோஜ் ஜாவுக்கும் உத்தரவிட்டார்.

இதனால் கூட்டணியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு முந்தைய 3 கூட்டங்களிலும் நிதீஷ் குமாரின் பேச்சை மனோஜ் ஜாதான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இதன் காரணமாகவே, இந்த முறையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்படி மனோஜ் ஜாவிடம் டி.ஆர்.பாலு கேட்டிருக்கிறார்.

இக்கூட்டத்தில் நிதீஷ் குமார் அதிருப்தியுடன் காணப்பட்டார். கூட்டம் முடிந்த பிறகு கூட்டணித் தலைவர்கள் அனைவரும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். ஆனால், இதில் நிதீஷ் குமார் பங்கேற்கவில்லை. மேலும், ‘இண்டி’ கூட்டணி பிரதமர் வேட்பாளராக நிதிஷ் குமாரை யாருமே முன்மொழியவில்லை. ஆகவே, இண்டி கூட்டணியில் இருந்து பீகார் மாநிலத்தின் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வெளியேறக் கூடும் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: dmk mpnitish kumarSnapsT.R.Balu
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் 26-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

Next Post

இமயமலையைச் சுற்றி பார்க்க ஆசையா: கைரோகாப்டர் அறிமுகம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies