கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன் படுத்திய சஞ்சு சாம்சன்!
Jun 3, 2025, 06:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன் படுத்திய சஞ்சு சாம்சன்!

Web Desk by Web Desk
Dec 22, 2023, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – தென்னாபிரிக்கா இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சாதனை படைத்துள்ளார் சஞ்சு சாம்சன்.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மொத்தமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்தியா விளையாடியது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்த இந்திய வீரர் சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் சவுரவ் கங்குலி, விராட் கோலி ஆகியோருக்கு பின் தென்னாப்பிரிக்கா மண்ணில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். இந்நிலையில் ஆட்டநாயகன் விருதை பெற்ற அவர் இந்த வெற்றியை நினைத்து பெருமை கொள்கிறேன் என்று கூறினார்.

இதுகுறித்து அவர், ” எனது சதம் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியதை நினைக்கும் போது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது. கடினமாக உழைத்ததற்கான பலன் கிடைத்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் எப்போதும் ஆடுகளத்தையும், பவுலர்களின் மனநிலையையும் புரிந்து கொள்வதற்கு சிறிது நேரம் கிடைக்கும்.

அதேபோல் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்யும் போது கூடுதலாக 10 முதல் 20 பந்துகளை எடுத்து கொள்ள முடியும். திலக் வர்மாவின் ஆட்டத்தை பார்த்து இந்திய ரசிகர்கள் நிச்சயம் பெருமை கொள்வார்கள். கடினமான நேரத்தில் மிகச்சிறந்த ஆட்டத்தை ஆடியிருக்கிறார். அவரிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம்.

இந்திய அணியின் தரம் என்னவென்பதை இதற்கு முன் ஆடியவர்கள் ஒரு பெஞ்ச்மார்க் வைத்து சென்றுள்ளார்கள். அவர்களின் இடத்தில் ஜூனியர் வீரர்கள் பணிகளை செய்ய தொடங்கியுள்ளார்கள். அதேபோல் பவுலர்களுக்கு இது எளிய தொடர் அல்ல. ஏனென்றால் 2 முதல் 3 நாட்களுக்கு ஒரு சர்வதேச போட்டியில் விளையாடி சாதாரணம் கிடையாது. ஆனாலும் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் சதத்தை அடித்த சஞ்சு சாம்சன், தனது முஷ்டியை மடக்கி காட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அவரின் ஆட்டத்தை பார்த்து இந்திய அணி வீரர்கள், ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைகளை தட்டி பாராட்டினர்.

கேரளா மாநிலத்தில் இருந்து இந்திய அணிக்காக முதல் சதம் எடுத்த வீரர் என்ற பெருமையும் சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார். 2015 ஆம் ஆண்டு சர்வதேச போட்டியில் இடம் பிடித்த சஞ்சு சாம்சன் கடந்த 8 ஆண்டுகளில் வெறும் 16 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

இந்நிலையில் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனது திறமையை காண்பித்துள்ளார் சஞ்சு சாம்சன் என்று ரசிகர்கள் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.

Tags: indian cricket playerSanju Samson
ShareTweetSendShare
Previous Post

தெலுங்கானாவில் பயங்கர தீ விபத்து!

Next Post

ஏடன் கடற்பகுதியில் ஏவுகணையை தாக்கி அழிக்கும் போர் கப்பல்!

Related News

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான் : நிதி வழங்குவதை தடுத்து நிறுத்த இந்தியா நடவடிக்கை!

அமைச்சர் தா. மோ. அன்பரசன், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை தவிர்ப்பது மாணவர்களுக்கு செய்யும் பேருதவியாக அமையும் : அண்ணாமலை

அரக்கோணத்தில் கூட பல சார்கள் இருக்கிறார்கள் – தமிழிசை செளந்தரராஜன்

நிலுவையில் உள்ள பல பாலியல் வழக்குகளுக்கும் நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

SIR-ஐ காப்பாற்றியது யார்? – இபிஎஸ்

இளவரசருக்காக மதுரையில் நடத்தப்பட்ட திமுக பொதுக்குழு : எல். முருகன் விமர்சனம்!

தீய சக்திகளின் உருவம் தான் திராவிடியன் ஸ்டாக் : எச்.ராஜா விமர்சனம்!

15ம் தேதி நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு!

மாணவியை மிரட்டுவதற்காகச் சார் என்ற வார்த்தையை பயன்படுத்திய ஞானசேகரன் : தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி!

மாநிலங்களவை தேர்தல் – தேர்தல் அலுவலர் நியமனம்!

சென்னை பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு மே மாத ஊதியம் நாளை வழங்கப்படும் – தமிழக அரசு

இந்திய வீரர், வீராங்கனைகளை பாராட்டிய பிரதமர்!

ஸ்பெயின் : செனட் நிர்வாகிகளுடன் அனைத்து கட்சி எம்.பி-க்கள் குழு சந்திப்பு!

பொள்ளாச்சி அருகே வீட்டில் இருந்த கல்லூரி மாணவி குத்திக் கொலை : இளைஞர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies