வடமேற்கு சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 144 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் வடமேற்கு பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் கிங்காய் மாகாணத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது.
இது கான்சூ மாகாணத்தின் ஜிஷிஷான் கவுன்ட்டியில் உணரப்பட்டது. மேலும், கிங்காய் மாகாணமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், இரு மாகாணங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டன.
நிலநடுக்கத்தால், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. ஏராளமான வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், மக்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அச்சப்படுகின்றனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 144 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.