இந்தியா- ஆஸ்திரேலியா மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் : இந்தியா 187 ரன்கள் முன்னிலை!!
Mar 15, 2026, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா- ஆஸ்திரேலியா மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் : இந்தியா 187 ரன்கள் முன்னிலை!!

Murugesan M by Murugesan M
Dec 23, 2023, 11:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 406 ரன்களை எடுத்து 187 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை டெஸ்ட் போட்டி தொடங்கியது. இப்போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் இந்திய அணி தரப்பில் ரிச்சா கோஷ் முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.

மேலும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீராங்கனையாக ஃபோப் லிட்ச்ஃபீல்ட் மற்றும் பெத் மூனி களமிறங்கினர்.

இதில் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியே சென்றார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய பெத் மூனி 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அப்போது களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் அலிசா ஹீலி 38 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக தஹ்லியா மெக்ராத் 5 ரன்களை எடுத்தார்.

இறுதியாக ஆஸ்திரேலியா அணி 219 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக பூஜா 4 விக்கெட்களை வீழ்த்தினார். சினே ரானா 3 விக்கெட்களையும், தீப்தி சர்மா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனையாக ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்ம்ரிதி மந்தனா ஆகியோர் களமிறங்கினர். இவர்கள் இருவரும் அற்புதமாக தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்தி 90 ரன்களை எடுத்தனர்.

சிறப்பாக சென்று கொண்டிருந்த இவர்களின் கூட்டணி ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தது. ஷஃபாலி வர்மா 8 பௌண்டரீஸ் என மொத்தமாக 40 ரன்களை எடுத்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சினே ரானா 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து விளையாடி வந்த மந்தனா 74 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிச்சா கோஷ் 52 ரன்களும், பூஜா வஸ்த்ரகர் 47 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 73 ரன்களும், தீப்தி சர்மா 78 ரன்களும் எடுத்தனர். இறுதியாக இந்திய பெண்கள் 406 ரன்களை எடுத்து 187 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஆஷ்லே கார்ட்னர் 4 விக்கெட்களை வீழ்த்தினார். அன்னாபெல் சதர்லேண்ட் மற்றும் கிம் கார்த் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஜெஸ் ஜோனாசென் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

Tags: india vs austrlaliaindia womens cricket team
ShareTweetSendShare
Previous Post

மாணவர்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் சித்தராமையா!

Next Post

ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி 6-ஆம் தேதி இலக்கை அடையும் – இஸ்ரோ தலைவர்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies