மீண்டும் தலைத்தூக்கிய கொரோனா! - அதிர்ச்சி ரிப்போர்ட்
Jul 23, 2025, 09:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீண்டும் தலைத்தூக்கிய கொரோனா! – அதிர்ச்சி ரிப்போர்ட்

Web Desk by Web Desk
Dec 23, 2023, 05:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு, உலகம்
முழுவதும் வேகமாக பரவியது. கொரோனாவால் உலகில் பெரும்பாலான நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிய தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், கொரோனா வைரஸ் உருமாறி கொண்டே இருக்கிறது. இது உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனாவின் தாக்கம் குறைந்திருந்த நிலையில், தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது.

ஓமிக்ரான் பிஏ.2.86 வைரஸிலிருந்து திரிபு ஏற்பட்டு, ஜே.என். 1 எனும் புதிய வகை கொரோனா வைரஸ் உருவாகி உள்ளது. இதன் காரணமாக, உலகம் முழுவதும் வேகமாக கொரோனா வேகமாக பரவி வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு, அடுத்தடுத்து சீனாவிலும், சிங்கப்பூரிலும் பரவியது.

சிங்கப்பூரில் இது மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவைப் பொறுத்த வரை புதிய வகை கொரோனா வைரஸால் இருபத்தி இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 சதவிகிதம் அதிகரித்துள்ளது என உலக சுகாதார மையம் கவலை தெரிவித்துள்ளது.

கடந்த 28 நாட்களில் மட்டும் 8 இலட்சத்து 50 ஆயிரம் பேர் புதியதாக கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் ஜே.என். 1 கொரோனா வைரஸ். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் நாடுகளில் மட்டும் ஜே.என்.1 வகை கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுகிறது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் அனைவரும் முகக்கவசம் அணியவும், அடிக்கடிக்க கைகழுவும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.

Tags: worldcoronacorona jn1
ShareTweetSendShare
Previous Post

தூத்துக்குடியில் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம்!- சேவா பாரதி தென்தமிழ்நாடு

Next Post

நிரம்பியது மணிமுத்தாறு அணை – நெல்லையில் பரபரப்பு!

Related News

அசுத்தமாக குடிநீர் வருவதாக முறையிட்ட மக்கள் – தண்ணீர் பாட்டிலை பிடுங்கி எறிந்த திமுக எம்எல்ஏ!

கடலூரில் சட்ட விரோத கருக்கலைப்பு தொடர்பாக 6 பேர் கைது!

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு – விசாரணை குழுத் தலைவராக டிஐஜி அபினவ் குமார் நியமனம்!

4 நாள் அரசுமுறைப் பயணம் – பிரிட்டன், மலாத்தீவு நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி!

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் – அண்ணாமலை கண்டனம்!

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இடமாற்றத்தில் மகிழ்ச்சி இல்லை, நல்ல நினைவுகளுடன் செல்கிறேன் – நீதிபதி விவேக் குமார் சிங்

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

100 நாள் வேலை திட்டம் – தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்!

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies