ப்ரோ கபடி : பெங்களூரு அணி போராடி வெற்றி!
Mar 15, 2026, 07:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ப்ரோ கபடி : பெங்களூரு அணி போராடி வெற்றி!

Murugesan M by Murugesan M
Dec 25, 2023, 11:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி போராடி வெற்றி பெற்றது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன.

பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய அணிகள் பங்குபெற்றுள்ளனர்.

இதில் நேற்று நடைபெற்ற 39-வது போட்டியில் பெங்களூரு புல்ஸ் – தெலுகு டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. தெலுகு டைட்டன்ஸ் அணி மிக மோசமான நிலையில் இருந்ததால் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து ஒன்று, இரண்டு இடமாவது முன்னேறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.

தெலுகு டைட்டன்ஸ் அணியில் நட்சத்திர ரெய்டர் பவன் செஹ்ராவத் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வீரராக இருக்கிறார். அவரை மட்டும் நம்பியேப் காலத்தில் இறங்கியது அந்த அணி.

ஆனால், பெங்களுரு புல்ஸ் அணியில் தடுப்பாட்டம் மிக சிறப்பாக இருந்ததால் துவக்கம் முதலே பவன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் திணறினார். இந்த நிலையில், முதல் பாதியில் பெங்களுரு புல்ஸ் 16 – 12 என்ற அளவில் முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதியிலும் புல்ஸ் அணி முன்னிலையில் இருந்தது. கடைசி 4 நிமிடங்கள் இருந்த போது அந்த அணி 30 – 22 என்ற அளவில் முன்னிலையில் இருந்தது. எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என எண்ணிய நிலையில், பெங்களுரு அணிக்கு தோல்வி பயத்தை காட்டியது பவன் செஹ்ராவத்தின் சூப்பர் ரெய்டு.

கடைசி 3 நிமிடங்கள் இருந்த போது, பெங்களுரு அணியில் மூன்று வீரர்கள் களத்தில் இருந்த நிலையில் பவன் ரெய்டு சென்றார். அவர்கள் மூவரையும் ஒரே ரெய்டில் அவுட் ஆக்கி வெளியேற்றினார்.

பெங்களுரு அணி ஆல் – அவுட் ஆனதால் கூடுதலாக 2 புள்ளிகளும் கிடைத்தது. இதை அடுத்து 2 புள்ளிகள் வித்தியாசத்தில் மட்டுமே முன்னிலையில் இருந்தது பெங்களுரு. எப்படியோ போராடி ஆட்ட நேர முடிவில் பெங்களுரு புல்ஸ் 33 – 31 என்ற புள்ளிக் கணக்கில் போட்டியில் வெற்றி பெற்றது. தெலுகு டைட்டன்ஸ் அணி தான் ஆடிய ஏழு போட்டிகளில் தன் ஆறாவது தோல்வியை பதிவு செய்தது.

Tags: kabadi gamepro kabadi
ShareTweetSendShare
Previous Post

மகிழ்ச்சி நிறைந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்! – அண்ணாமலை

Next Post

சனாதனம் நித்தியமானது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies