ப்ரோ கபடி : பெங்களூரு அணி போராடி வெற்றி!
Jul 25, 2025, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ப்ரோ கபடி : பெங்களூரு அணி போராடி வெற்றி!

Web Desk by Web Desk
Dec 25, 2023, 11:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி போராடி வெற்றி பெற்றது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன.

பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய அணிகள் பங்குபெற்றுள்ளனர்.

இதில் நேற்று நடைபெற்ற 39-வது போட்டியில் பெங்களூரு புல்ஸ் – தெலுகு டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. தெலுகு டைட்டன்ஸ் அணி மிக மோசமான நிலையில் இருந்ததால் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து ஒன்று, இரண்டு இடமாவது முன்னேறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.

தெலுகு டைட்டன்ஸ் அணியில் நட்சத்திர ரெய்டர் பவன் செஹ்ராவத் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வீரராக இருக்கிறார். அவரை மட்டும் நம்பியேப் காலத்தில் இறங்கியது அந்த அணி.

ஆனால், பெங்களுரு புல்ஸ் அணியில் தடுப்பாட்டம் மிக சிறப்பாக இருந்ததால் துவக்கம் முதலே பவன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் திணறினார். இந்த நிலையில், முதல் பாதியில் பெங்களுரு புல்ஸ் 16 – 12 என்ற அளவில் முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதியிலும் புல்ஸ் அணி முன்னிலையில் இருந்தது. கடைசி 4 நிமிடங்கள் இருந்த போது அந்த அணி 30 – 22 என்ற அளவில் முன்னிலையில் இருந்தது. எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என எண்ணிய நிலையில், பெங்களுரு அணிக்கு தோல்வி பயத்தை காட்டியது பவன் செஹ்ராவத்தின் சூப்பர் ரெய்டு.

கடைசி 3 நிமிடங்கள் இருந்த போது, பெங்களுரு அணியில் மூன்று வீரர்கள் களத்தில் இருந்த நிலையில் பவன் ரெய்டு சென்றார். அவர்கள் மூவரையும் ஒரே ரெய்டில் அவுட் ஆக்கி வெளியேற்றினார்.

பெங்களுரு அணி ஆல் – அவுட் ஆனதால் கூடுதலாக 2 புள்ளிகளும் கிடைத்தது. இதை அடுத்து 2 புள்ளிகள் வித்தியாசத்தில் மட்டுமே முன்னிலையில் இருந்தது பெங்களுரு. எப்படியோ போராடி ஆட்ட நேர முடிவில் பெங்களுரு புல்ஸ் 33 – 31 என்ற புள்ளிக் கணக்கில் போட்டியில் வெற்றி பெற்றது. தெலுகு டைட்டன்ஸ் அணி தான் ஆடிய ஏழு போட்டிகளில் தன் ஆறாவது தோல்வியை பதிவு செய்தது.

Tags: kabadi gamepro kabadi
ShareTweetSendShare
Previous Post

மகிழ்ச்சி நிறைந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்! – அண்ணாமலை

Next Post

சனாதனம் நித்தியமானது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies