நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
ஐ.பி.சி., எனப்படும், இந்திய தண்டனை சட்டம், சிஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், ஐ.இ.சி., எனப்படும் இந்திய சாட்சியங்கள் சட்டம் முறையே 1860, 1898 மற்றும் 1872ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்டன.
தற்போதைய காலத்திற்கு ஏற்ப சில திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது. இதனையடுத்த இதுதொடர்பான மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து பழைய மசோதா வாபஸ் பெறப்பட்டு, நிலைக்குழு அளித்த பரிந்துரைகள் சேர்க்கப்பட்டு, திருத்தம் செய்யப்பட்ட மசோதாக்கள், மக்களவையில் டிசம்பர் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இதன் மீதான விவாதம் முடிவடைந்த நிலையில், குரல் ஓட்டெடுப்பு வாயிலாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. ,’பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷிய சன்ஹிதா’ என, ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.