ஜி.எஸ்.டி. பணத்தில் மத்திய அரசு பாரபட்சமா? தமிழக அரசு பொய் சொல்கிறது!
Jan 14, 2026, 09:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜி.எஸ்.டி. பணத்தில் மத்திய அரசு பாரபட்சமா? தமிழக அரசு பொய் சொல்கிறது!

பா.ஜ.க. சிந்தனையாளர் பிரிவு கூட்டத்தில் புள்ளி விவரத்துடன் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 26, 2023, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் தனது வருவாயில் 49.2% மத்திய வரிகளிலிருந்து பெறுகிறது. எனவே, ஒப்புக் கொள்ளப்பட்ட சூத்திரத்தின் அடிப்படையில் மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை. ஆகவே, ஜி.எஸ்.டி. வரியில் பாராபட்சம் காட்டுவதாக தமிழகம் கூறுவது அப்பட்டமான பொய் என்று பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் கோபால் கிருஷ்ண அகர்வால் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பா.ஜ.க. சிந்தனையாளர் பிரிவின் மாநிலத் தலைவர் ஷெல்வி கே.தாமோதர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25-ம் தேதி நல்லாட்சி தினமாக கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, பா.ஜ.க.வின் சிந்தனையாளர் பிரிவு சார்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில், “இந்தியா@2030-சவால்கள் மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழி” என்கிற தலைப்பில் பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் கோபால் கிருஷ்ண அகர்வால் பேசுகையில், “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நோக்கம் கடைசி பயனாளி கூட மத்திய அரசு திட்டத்தின் பலனைப் பெற வேண்டும் என்பதுதான். 2024-ம் ஆண்டுக்குள் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் 100% மக்களை சென்றடைந்திருக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

முந்தைய அரசாங்கங்களின் “புல்” மாடலுக்கு எதிராக, ஒவ்வொரு பயனாளியையும் சென்றடையும் வகையில் சேவைகளை வழங்குவதற்கான “புஷ்” மாடலை என்.டி.ஏ. கூட்டணி அரசாங்கம் செய்து வருகிறது. திட்டங்களைப் பற்றி பயனாளிகள் தெரிந்துகொண்டு விண்ணப்பிப்பதற்காக என்.டி.ஏ. அரசாங்கம் காத்திருக்கவில்லை. பயனாளிகளை தேடிச் சென்று வழங்குகிறது.

மேலும், இந்த அரசாங்கம் எப்போதுமே நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை தாண்டி இருக்கிறது. உதாரணமாக, ஜன்தன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது 7.5 கோடி பயனாளிகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 50 கோடி பயனாளிகள் பயன் பெற்றிருக்கிறார்கள். அதேபோல, ஜல் ஜீவன் மிஷன் அறிவிக்கப்பட்ட 2019-ல் 2.5 கோடி வீடுகளுக்கு மட்டுமே தூய்மையான, சுகாதாரமான குடிநீர் குழாய் இணைப்புகள் இருந்தன. இது, 2025-ம் ஆண்டுக்குள் 19 கோடி வீடுகளில் இணைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர, திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசால் மாநில அரசுக்கு நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதி சாமானியர்கள் பயன்பெறும் வகையில், இடையில் முறைகேடு நடக்காமல் இருப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், இந்தியப் பொருளாதாரம் வலுவானது. அதேசமயம், வளர்ச்சியின் அடிப்படையில் உலகப் பொருளாதாரத்தில் அந்நிய நேரடி முதலீடு போன்றவை தற்செயலாக இல்லை. இதற்குக் காரணம், வலுவான பொருளாதாரக் கொள்கைகளை கவனமாகப் பயன்படுத்துவதான்.

உதாரணமாக, கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், மறைமுக வரிகளின் சராசரி விகிதம் 25-30% ஆக இருந்தது. ஜி.எஸ்.டி.க்குப் பிறகு சராசரி விகிதம் 11% ஆகக் குறைந்துள்ளது. இருந்த போதிலும், ஜி.எஸ்.டி.யில் சாதனை எண்ணிக்கையைப் பார்க்கிறோம். இது NDA அரசாங்கத்தின் மற்றொரு அம்சத்தைக் காட்டுகிறது. அடுத்த 2-3 தசாப்தங்களில், உலகப் பொருளாதார நடவடிக்கைகள் இந்தியாவுக்கு மாறப் போகிறது.

இந்தியா விஸ்வகுருவாக மாறுவதற்கு ஆத்ம நிர்பர் இந்தியா ஒரு முக்கியப் படியாக இருக்கப் போகிறது. எடுத்துக்காட்டாக, 2014-இல் 90% பாதுகாப்புத் தேவைகள் இறக்குமதி செய்யப்பட்டன. தற்போது, 68% தேவைகள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கு, சிக்கலைக் கண்டறிதல், சிக்கலை ஒப்புக்கொள்ளுதல், சிக்கலைத் தீர்ப்பது என்ற அணுகுமுறையை இந்த அரசாங்கம் பயன்படுத்துகிறது.

மேலும், பிரதமர் மோடி அறிவுப் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரப் பொருளாதாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறார். தவிர, கலாச்சாரப் பொருளாதாரத்தில் தமிழகம் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டிருப்பதாக அவர் கருதுகிறார். இதை மேம்படுத்துவதற்கு சிறந்ததைச் செய்கிறார். நிதிப் பொறுப்பு, அரசாங்கக் கடன் மற்றும் பணவீக்கம் ஆகியவை இன்று இருக்கும் பெரிய சவால்களாகும். இதை மத்திய அரசு திறம்பட நிவர்த்தி செய்து வருகிறது.

தமிழகம் செலுத்தும் வரியில் ரூபாய்க்கு 30 பைசா பெறுகிறது என்ற தமிழக அமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்கு, தேசிய வரி வருவாயில் தமிழகம் 5.6% பங்களிப்பதோடு, மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த வருவாயில் 6.2% திரும்பப் பெறுகிறது. பிற மாநிலங்கள் 46.5% வருவாயை மத்திய வரிகளிலிருந்து பெறுகின்றன. தமிழ்நாடு அதன் வருவாயில் 49.2% மத்திய வரிகளிலிருந்து பெறுகிறது. எனவே, ஒப்புக் கொள்ளப்பட்ட சூத்திரத்தின் அடிப்படையில் மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை.

மாநில பேரிடர் நிவாரண நிதியில் 75 சதவீதம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. சென்னையில் மிக்ஜாம் புயலில் கூட, மொத்த மழைநீர் வடிகால் பணிகளில் 98% முடிந்து விட்டதாகவும், பட்ஜெட்டில் சுமார் 4,000 கோடிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்கள். திடீரென புயலுக்குப் பின் அந்த எண்ணிக்கையை 42% ஆக மாற்றினார்கள். இத்தகைய முரண்பாடுகள் இருந்தபோதிலும், உதவித் தொகையைத் தவிர, சென்னை மண்டலத்தில் மழைநீர் வடிகால் சீரமைக்க 560 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.

பா.ஜ.க. மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா பேசுகையில், “நல்லாட்சி ஆட்சியில் இருக்கும் கட்சியே மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும். குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும், கோவா போன்ற யூனியன் பிரதேசங்களிலும் பா.ஜ.க.வின் நல்லாட்சி இருப்பதைப் புறக்கணிக்க முடியாது.

பா.ஜ.க. வாக்காளர்களுக்கு நிதி பொறுப்பு வாக்குறுதிகளை அளிக்கிறது. எடுத்துக்காட்டாக, 22% ஹெச்.பி. வாக்காளர்கள் ஓய்வூதியம் பெறுபவர்கள் இருந்தபோதிலும், பா.ஜ.க. பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு வாக்குறுதி அளிக்கவில்லை. ஏனெனில், இது மாநிலத்திற்கு நிதி ரீதியாக சாத்தியமற்றது.

அதேபோல, மக்களின் விருப்பப்படி 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கு முன்பே ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பா.ஜ.க. 46% வாக்குகளைப் பெற்றது. பா.ஜ.க.வின் ஆட்சிக்குப் பிறகுதான் உத்தரப் பிரதேசம் வேகமாக வளர்ந்திருக்கிறது.

தமிழகத்தில் ஒரே ஒரு மெட்ரோ இரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் 7 மெட்ரோ இரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல, தமிழகம் 10 செயல்பாட்டு விமான நிலையங்களைக் கொண்டுள்ளது. தற்போது மத்திய பா.ஜ.க. அரசு மேலும் 7 விமான நிலையங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.

அதேசமயம், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையின் கீழ் நடைபெறும் உத்தரப் பிரதேச மாநிலம் 22 விமான நிலையங்களைக் கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி காசியை மாற்றி அமைப்பதற்கு முன்பு, ஆண்டுக்கு 30 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்தது. தற்போது, ஆண்டுக்கு 7 கோடி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது” என்று கூறியதாக ஷெல்வி தெரிவித்திருக்கிறார்.

Tags: bjpmeetingThinkers Cell
ShareTweetSendShare
Previous Post

வேங்கைவயல் சம்பவம் நடந்து ஒரு ஆண்டு கடந்து விட்டது முதலமைச்சர் ஸ்டாலின்! – அண்ணாமலை

Next Post

வாஜ்பாயை பாராட்டிய நிதீஷ் குமார்: “இண்டி” கூட்டணியில் சலசலப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies