வாஜ்பாயை பாராட்டிய நிதீஷ் குமார்: "இண்டி" கூட்டணியில் சலசலப்பு!
Jan 14, 2026, 06:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாஜ்பாயை பாராட்டிய நிதீஷ் குமார்: “இண்டி” கூட்டணியில் சலசலப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 26, 2023, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹிந்தியை கற்றுக்கொள்ளும்படி பீகார் முதல்வர் நிதீஷ் குமார், தி.மு.க.வினருக்கு அறிவுறுத்தியது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தற்போது வாஜ்பாயை புகழ்ந்து பேசியிருப்பது “இண்டி” கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக, 28 மாநிலக் கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஒன்றிணைந்து “இண்டி” என்கிற பெயரில் கூட்டணியை ஏற்படுத்தி இருக்கின்றன. இக்கூட்டணியின் முதல் கூட்டம் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் முதல்வராக இருக்கும் பீகார் மாநிலத்தில் நடந்தது.

இதன் பிறகு பெங்களூரு, மும்பை, டெல்லி என கூட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. ஆனால், இக்கூட்டணியில் அவ்வப்போது சலசலப்புகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, நிதீஷ் குமார் கூட்டணி அமைந்த சில மாதங்களிலேயே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வந்தார்.

அதேபோல, நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலின்போது மத்தியப் பிரதேசம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கூட்டணிக் கட்சிகளை மதிக்காமல் தனி ஆவர்த்தனம் செய்வதாக, கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினார்.

மேலும், சனாதன விவகாரத்தில் தி.மு.க.வுக்கு எதிராக காங்கிரஸ் உட்பட கூட்டணியில் இருக்கும் பல்வேறு கட்சிகளும் கருத்துத் தெரிவித்தன. தவிர, பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அறிவித்ததும் கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

அதோடு, சமீபத்தில் டெல்லியில் நடந்த “இண்டி” கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தின்போது, பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ஹிந்தியில் பேசியதை தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்படி கூறியதால், ஹிந்தி கற்றுக்கொள்ளும்படி நிதீஷ் குமார் கூறியது சர்ச்சையே ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் பா.ஜ.க.வைச் சேர்ந்த வாஜ்பாய் குறித்து நிதீஷ் குமார் புகழ்ந்து பேசியிருப்பது “இண்டி” கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, வாஜ்பாய் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பீகார் முதல்வர் நிதீஷ் குமார், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “வாஜ்பாய் ஒரு சிறந்த தலைவர். அவரது ஆட்சி காலத்தில் நான் மத்திய அமைச்சராக இருந்தேன். அவர் எனக்கு முக்கியப் பொறுப்பு கொடுத்து அழகு பார்த்தார்.

பீகார் முதல்வராக நான் பொறுப்பேற்றதில் வாஜ்பாயிக்கு முக்கியப் பங்கு உண்டு. மேலும், வாஜ்பாய் பாரபட்சமின்றி ஆட்சி செய்தார். என் வாழ்நாளில் அவரை மறக்க முடியாது. வாஜ்பாயின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளேன்” என்றார்.

உடனே நிருபர்கள், “அப்படி என்றால் அரசியலில் வாஜ்பாயின் கொள்கையை ஏற்கிறார்களா” என் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நிதீஷ் குமார், “வாஜ்பாய் மிகச் சிறந்த நிர்வாகி. அவர் ஆட்சியில் மக்களுக்கு பல நன்மைகள் நடந்துள்ளன. அவருடன் நானும் இணைந்து பல பணிகளை செய்துள்ளேன்” என்று நேரடியாக பதில் கூறாமல், மழுப்பலாகக் கூறினார்.

Tags: Bihar CMnitish kumarAdal Bihari VajpayeeINDI Alliance
ShareTweetSendShare
Previous Post

ஜி.எஸ்.டி. பணத்தில் மத்திய அரசு பாரபட்சமா? தமிழக அரசு பொய் சொல்கிறது!

Next Post

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! – சென்னை வானிலை ஆய்வு மையம்

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies