தேச பக்தியும், தெய்வ பக்தியும் ஒருங்கே பெற்றவர்: ஓ.பன்னீர்செல்வம்!
Jul 4, 2025, 10:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேச பக்தியும், தெய்வ பக்தியும் ஒருங்கே பெற்றவர்: ஓ.பன்னீர்செல்வம்!

Web Desk by Web Desk
Dec 28, 2023, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விஜயகாந்த் தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் ஒருங்கே பெற்றவர் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அ.தி.மு.க.வின் முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், “தமிழ்த் திரைவானில் கொடிகட்டி பறந்தவரும், தமிழக சட்டப்பேரவை முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனருமான அன்புச் சகோதரர் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

‘புரட்சிக் கலைஞர்’ என்றும், ‘கேப்டன்’ என்றும் தனது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட அன்புச் சகோதரர் விஜயகாந்த் அவர்கள், தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் ஒருங்கே பெற்றவர். ஜாதி, மத பேதமின்றி ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த காலத்தில் பல நிகழ்ச்சிகள் மூலம் சங்கத்தின் கடனை அடைத்தவர் திரு.விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. பல வெற்றிப் படங்கள் மூலம் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர். கலைமாமணி உட்பட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர்.

தனியாக ஒரு கட்சியைத் துவக்கி, சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் உயர்ந்த பெருமை இவருக்கு உண்டு. திரையுலகிலும், அரசியலிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் விஜயகாந்த் அவர்கள். அவருடன் அரசியல் ரீதியாக நெருங்கிப் பழகிய அனுபவம் எனக்கு உண்டு.

இவருடைய இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது. இவரது இழப்பு தமிழக மக்களுக்கு பேரிழப்பாகும். விஜயகாந்த் அவர்கள் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது அவரை உடனிருந்து கண் இமை போல் காத்தவர் அவரது மனைவி அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் என்பதை இந்தத் தருணத்தில் நினைவுகூர்கிறேன்.

அன்புச் சகோதரர் விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது மனைவி அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்துக்கும், திரைப்பட ரசிகர்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: O PannirselvamcondolenceADMK
ShareTweetSendShare
Previous Post

செயற்கரிய பல செயல்கள் செய்தவர்: எடப்பாடி பழனிசாமி!

Next Post

விஜயகாந்த் பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும்: டி.டி.வி.தினகரன்!

Related News

அஜித் கொலை வழக்கு – சக்தீஸ்வரன் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு!

டிரினிடாட் மற்றும் டெபாகோ வாழ் இந்திய வம்சாவளியினருக்கு சிறப்பு விசா – பிரதமர் மோடி

சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றம் பிளிட்ஸ் செஸ் போட்டி – மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி குகேஷ் முதலிடம்!

சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் புகழாஞ்சலி!

அஜித் கொலையில் ஐஏஎஸ் அதிகாரியின் தொடர்பை மூடி மறைக்கிறது திமுக அரசு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் குற்றச்சாட்டு!

சிகரெட் சூடு, 44 காயங்கள், மூளையில் ரத்த கசிவு – அஜித் பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

விருதுநகர் அருகே கட்டிட வசதி கோரி அரசுப்பள்ளி மாணவர்கள் போராட்டம்!

கிருஷ்ணகிரி அருகே சிறுவன் கடத்தி கொலை – இபிஎஸ் கண்டனம்!

நாங்கள் வைத்தது தான் சட்டம் என்று செயல்பட இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? – உயர் நீதிமன்றம் கேள்வி!

அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதா கூறுவது அனைத்தும் பொய் – முன்னாள் கணவர் பேட்டி!

இளைஞர் அஜித்குமார் கொலை விவகாரம் – நிகிதாவுக்கு எதிராக குவியும் புகார்!

அஜித்குமாரை வலுக்கட்டாயமாக கஞ்சா குடிக்க வைத்து போலீசார் தாக்கினர் – உறவினர் மனோஜ்பாபு பேட்டி!

இனி இதுபோன்ற கொடூர சம்பவம் நிகழக்கூடாது – அஜித்குமாரின் தாயார் பேட்டி!

அஜித் குமார் கொலை வழக்கு – தாயார், சகோதரரிடம் நீதிபதி விசாரணை!

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies