அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்தி பெயர்!
Jan 14, 2026, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்தி பெயர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 28, 2023, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில், ஏற்கெனவே ராபர்ட் வதேராவின் பெயர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிரியங்கா காந்தியின் பெயரையும் அமலாக்கத்துறை சேர்த்திருக்கிறது.

ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரிக்கு எதிராக வருமான வரி ஏய்ப்பு, நில மோசடி, சட்ட விரோத பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன.

இதன் காரணமாக, கடந்த 2016-ம் ஆண்டு சஞ்சய் பண்டாரி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று விட்டார். எனினும், அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. இதன் பயனாக சஞ்சய் பண்டாரியை நாடு கடத்த அந்நாட்டு அரசு கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்திருக்கிறது.

இந்த நிலையில்தான், ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரியின் நில மோசடி வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்தியின் பெயரை அமலாக்கத்துறை சேர்த்திருக்கிறது.

அதாவது, டெல்லியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளரான ஹெச்.எல்.பாஹ்வா என்பவரிடம் இருந்து, பிரியங்கா காந்தி கடந்த 2006 ஏப்ரல் மாதம் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் அருகே உள்ள அமிபூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்துடன் கூடிய வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார். இந்த நிலம் 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவருக்கே விற்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, 2005 – 2006-ம் ஆண்டுகளில், பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவும் இதே அமிபூர் கிராமத்தில் ஹெச்.எல்.பாஹ்வாவிடமிருந்து 40.8 ஏக்கர் நிலத்தை வாங்கி இருக்கிறார். இந்த நில ஒப்பந்தத்தை சி.சி. தம்பி ஏற்பாடு செய்திருக்கிறார். அதோடு, சிசி தம்பியும் 2005 முதல் 2008 வரை அமிபூர் கிராமத்தில் 486 ஏக்கர் நிலத்தை வாங்கி இருக்கிறார்.

இந்த சிசி தம்பியும், சுமித் சதாவும்தான் ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதற்கு உதவி செய்ததாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டி இருக்கிறது. மேலும், 486 ஏக்கர் நிலம் விற்கப்பட்டதில் நடந்த மோசடி காரணமாக சிசி தம்பி கைது செய்யப்பட்டார். பின்னர், 2020-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்து சிசி தம்பி, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஹரியானாவில் நடந்த நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. இந்த குற்றப்பத்திரிகையில் ஏற்கெனவே பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவின் பெயரை சேர்த்திருந்தது. இந்த சூழலில், பிரியங்கா காந்தியின் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

ஆக, நில மோசடி வழக்கில் பிரியங்கா காந்தியும், அவரது கணவர் ராபர்ட் வதேராவும் வசமாக சிக்கி இருக்கிறார்கள்.

Tags: Priyanga gandhiPMLA caseRobert Vadra
ShareTweetSendShare
Previous Post

மத்தியப் பிரதேச சாலைவிபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு : விஜயகாந்த் எடுத்த முடிவு!

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies