அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்தி பெயர்!
Jul 26, 2025, 07:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்தி பெயர்!

Web Desk by Web Desk
Dec 28, 2023, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில், ஏற்கெனவே ராபர்ட் வதேராவின் பெயர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிரியங்கா காந்தியின் பெயரையும் அமலாக்கத்துறை சேர்த்திருக்கிறது.

ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரிக்கு எதிராக வருமான வரி ஏய்ப்பு, நில மோசடி, சட்ட விரோத பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன.

இதன் காரணமாக, கடந்த 2016-ம் ஆண்டு சஞ்சய் பண்டாரி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று விட்டார். எனினும், அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. இதன் பயனாக சஞ்சய் பண்டாரியை நாடு கடத்த அந்நாட்டு அரசு கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்திருக்கிறது.

இந்த நிலையில்தான், ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரியின் நில மோசடி வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்தியின் பெயரை அமலாக்கத்துறை சேர்த்திருக்கிறது.

அதாவது, டெல்லியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளரான ஹெச்.எல்.பாஹ்வா என்பவரிடம் இருந்து, பிரியங்கா காந்தி கடந்த 2006 ஏப்ரல் மாதம் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் அருகே உள்ள அமிபூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்துடன் கூடிய வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார். இந்த நிலம் 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவருக்கே விற்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, 2005 – 2006-ம் ஆண்டுகளில், பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவும் இதே அமிபூர் கிராமத்தில் ஹெச்.எல்.பாஹ்வாவிடமிருந்து 40.8 ஏக்கர் நிலத்தை வாங்கி இருக்கிறார். இந்த நில ஒப்பந்தத்தை சி.சி. தம்பி ஏற்பாடு செய்திருக்கிறார். அதோடு, சிசி தம்பியும் 2005 முதல் 2008 வரை அமிபூர் கிராமத்தில் 486 ஏக்கர் நிலத்தை வாங்கி இருக்கிறார்.

இந்த சிசி தம்பியும், சுமித் சதாவும்தான் ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதற்கு உதவி செய்ததாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டி இருக்கிறது. மேலும், 486 ஏக்கர் நிலம் விற்கப்பட்டதில் நடந்த மோசடி காரணமாக சிசி தம்பி கைது செய்யப்பட்டார். பின்னர், 2020-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்து சிசி தம்பி, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஹரியானாவில் நடந்த நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. இந்த குற்றப்பத்திரிகையில் ஏற்கெனவே பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவின் பெயரை சேர்த்திருந்தது. இந்த சூழலில், பிரியங்கா காந்தியின் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

ஆக, நில மோசடி வழக்கில் பிரியங்கா காந்தியும், அவரது கணவர் ராபர்ட் வதேராவும் வசமாக சிக்கி இருக்கிறார்கள்.

Tags: PMLA caseRobert VadraPriyanga gandhi
ShareTweetSendShare
Previous Post

மத்தியப் பிரதேச சாலைவிபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு : விஜயகாந்த் எடுத்த முடிவு!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies