அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்தி பெயர்!
Sep 30, 2025, 02:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்தி பெயர்!

Web Desk by Web Desk
Dec 28, 2023, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில், ஏற்கெனவே ராபர்ட் வதேராவின் பெயர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிரியங்கா காந்தியின் பெயரையும் அமலாக்கத்துறை சேர்த்திருக்கிறது.

ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரிக்கு எதிராக வருமான வரி ஏய்ப்பு, நில மோசடி, சட்ட விரோத பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன.

இதன் காரணமாக, கடந்த 2016-ம் ஆண்டு சஞ்சய் பண்டாரி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று விட்டார். எனினும், அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. இதன் பயனாக சஞ்சய் பண்டாரியை நாடு கடத்த அந்நாட்டு அரசு கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்திருக்கிறது.

இந்த நிலையில்தான், ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரியின் நில மோசடி வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்தியின் பெயரை அமலாக்கத்துறை சேர்த்திருக்கிறது.

அதாவது, டெல்லியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளரான ஹெச்.எல்.பாஹ்வா என்பவரிடம் இருந்து, பிரியங்கா காந்தி கடந்த 2006 ஏப்ரல் மாதம் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் அருகே உள்ள அமிபூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்துடன் கூடிய வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார். இந்த நிலம் 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவருக்கே விற்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, 2005 – 2006-ம் ஆண்டுகளில், பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவும் இதே அமிபூர் கிராமத்தில் ஹெச்.எல்.பாஹ்வாவிடமிருந்து 40.8 ஏக்கர் நிலத்தை வாங்கி இருக்கிறார். இந்த நில ஒப்பந்தத்தை சி.சி. தம்பி ஏற்பாடு செய்திருக்கிறார். அதோடு, சிசி தம்பியும் 2005 முதல் 2008 வரை அமிபூர் கிராமத்தில் 486 ஏக்கர் நிலத்தை வாங்கி இருக்கிறார்.

இந்த சிசி தம்பியும், சுமித் சதாவும்தான் ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதற்கு உதவி செய்ததாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டி இருக்கிறது. மேலும், 486 ஏக்கர் நிலம் விற்கப்பட்டதில் நடந்த மோசடி காரணமாக சிசி தம்பி கைது செய்யப்பட்டார். பின்னர், 2020-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்து சிசி தம்பி, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஹரியானாவில் நடந்த நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. இந்த குற்றப்பத்திரிகையில் ஏற்கெனவே பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவின் பெயரை சேர்த்திருந்தது. இந்த சூழலில், பிரியங்கா காந்தியின் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

ஆக, நில மோசடி வழக்கில் பிரியங்கா காந்தியும், அவரது கணவர் ராபர்ட் வதேராவும் வசமாக சிக்கி இருக்கிறார்கள்.

Tags: Priyanga gandhiPMLA caseRobert Vadra
ShareTweetSendShare
Previous Post

மத்தியப் பிரதேச சாலைவிபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு : விஜயகாந்த் எடுத்த முடிவு!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies