ஆசானுக்கு நன்றிக் கடன் செலுத்தும் மன்சூர் அலிகான்!
Jan 14, 2026, 06:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசானுக்கு நன்றிக் கடன் செலுத்தும் மன்சூர் அலிகான்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 29, 2023, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசானுக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில், நேற்று காலை முதல் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகேயே அமர்ந்திருக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான்.

நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவ்வாறு அஞ்சலி செலுத்த வரும் சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் சிறிது நேரம் அங்கு அமர்ந்திருந்து விட்டு, பின்னர் கிளம்பிச் சென்று விடுகிறார்கள். ஆனால், நடிகர் மன்சூர் அலிகான் மட்டும் நேற்று காலை முதல் தற்போது வரை விஜயகாந்த் உடல் வைக்கப்ட்டிருக்கும் இடத்துக்கு அருகிலேயே அமர்ந்திருக்கிறார்.

ஆம்! விஜயகாந்த் மறைவுச் செய்தியை கேள்விப்பட்டதும், மன்சூர் அலிகான் நேராக சாலிகிராமத்திலுள்ள விஜயகாந்த் இல்லத்திற்குச் சென்றார். அங்கு விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தியவர், அங்கேயே அமர்ந்திருந்தார்.

இதன் பிறகு, விஜயகாந்த் உடல் சாலிகிராமத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்களின் வெள்ளத்தில் ஊர்ந்து சென்ற அந்த வாகனத்தின் பின்னாலேயே மன்சூர் அலிகானும் நடந்தே சென்றார்.

மேலும், விஜயகாந்த் உடல் இரவு முழுவதும் கோயம்பேட்டிலேயே வைக்கப்பட்டிருந்த நிலையில், மன்சூர் அலிகான் அவரது உடலை விட்டு கொஞ்சம் கூட நகராமல் அங்கேயே இருந்தார். இதன் பிறகு, விஜயகாந்த் உடல் இன்று காலை தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அப்போதும் மன்சூர் அலிகான் கூடவே சென்றார். தற்போது வரை மன்சூர் அலிகான் அங்குதான் இருக்கிறார். இன்று மாலை விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யும்வரை மன்சூர் அலிகான் அங்கேயே இருப்பார் என்கிறார்கள். இதன் மூலம் தனது ஆசானுக்கு தன்னால் இயன்ற மரியாதையை மன்சூர் அலிகான் செலுத்துகிறார் என்கிறார்கள்.

ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் 1991-ம் ஆண்டு வெளியான ‘கேப்டன் பிரபாகன்’ படத்தில் மன்சூர் அலிகான் வில்லனாக அறிமுகமாகி இருந்தார். இப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இதன் பிறகு மன்சூர் அலிகானுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: actorTributeMansoor Alikhan!FuneralVijayakanth
ShareTweetSendShare
Previous Post

மழையால் பாதிப்புக்குள்ளான தென் மாவட்டங்களில் தூய்மைப் பணி! – அண்ணாமலை அறிவிப்பு!

Next Post

பயனற்ற பொருட்களை விற்றதில் மத்திய அரசுக்கு ரூ.1,163 கோடி வருவாய்!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies