மும்பையிலிருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் இஸ்ஸாமிய பெண் பக்தை!
Oct 3, 2025, 07:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பையிலிருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் இஸ்ஸாமிய பெண் பக்தை!

Web Desk by Web Desk
Dec 30, 2023, 11:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“ராமரை வணங்குவதற்கு ஒருவர் இந்துவாக பிறக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அவர் நல்ல மனிதராக இருப்பதுதான் முக்கியம்” என்கிறார் இஸ்லாமிய இளம்பெண் ஷப்னம்.

மும்பையைச் சேர்ந்த ஷப்னம் என்ற இளம் முஸ்லிம் பெண், மும்பையிலிருந்து அயோத்திக்கு பாதயாத்திரை பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவரது தோழர்களான ராமன் ராஜ் சர்மா மற்றும் வினீத் பாண்டே ஆகியோருடன், ஷப்னம் 1,425 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடக்க புறப்பட்டார்.

பிறப்பில் இஸ்லாமியர் என்ற போதும், தீவிர ராமபக்தையாக தன்னை அடையாளம் காட்டிக்கொள்கிறார். பெரிதாக எந்த திட்டமிடலும் இல்லாது மும்பையிலிருந்து அயோத்தி நோக்கி பாதயாத்திரையாக கிளம்பிவிட்டார் ஷ்பனம்.

“சாதி மத வேறுபாடுகளை கடந்து, ராமர் அனைவருக்கும் சொந்தமானவர்” என்று தெரிவித்த ஷப்னம், இதுபோன்ற கடினமான ஆன்மிக யாத்திரைகளை ஆண்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்ற கருத்தையும் உடைத்திருப்பதாக பெருமை கொள்கிறார்.

தினமும் 25 – 30 கிமீ நடக்கும் இவர்கள் தற்போது, மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்தவாவை அடைந்துள்ளனர். மூவரும் சமூக ஊடகங்களின் பிரபலங்களாக மாறியதில், செல்லும் ஊர்களில் எல்லாம் பொதுமக்கள் சந்தித்து செல்ஃபி எடுத்துக்கொள்கின்றனர்.

நீண்ட யாத்திரையால் களைப்பு வந்தாலும், ராமர் மீதுள்ள பக்தி தங்களை தொடர்ந்து செலுத்துவதாக மூவரும் தெரிவிக்கின்றனர். களைப்பு மட்டுமல்ல மூவருக்கு எதிர்ப்பும் அதிகம். செல்லும் இடங்களில் எல்லாம் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்குகின்றனர்.

ராமரின் வழிபாடு எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ அல்லது பிராந்தியத்திற்கோ மட்டுப்படுத்தப்படவில்லை என்று ஷப்னம் உறுதியாக நம்புகிறார், அது எல்லைகளைக் கடந்து முழு உலகத்தையும் உள்ளடக்கியது.

ஷப்னத்தின் யாத்திரை சவால்கள் இல்லாமல் இல்லை. அவரது பாதுகாப்பை உறுதி செய்வதில் மட்டுமின்றி, உணவு மற்றும் தங்குமிடத்திற்கான ஏற்பாடுகளிலும் காவல்துறை முக்கிய பங்காற்றியுள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள முக்கிய பகுதிகள் வழியாக செல்லும் போது, ​​காவல்துறையினர் அவரது பாதுகாப்பை உறுதிசெய்து, சில பிரச்சனையான சூழ்நிலைகளில் இருந்து அவர்களுக்கு உதவினார்கள்.

காவிக்கொடியை ஏந்தியபடி அவர் முன்னோக்கிச் செல்லும்போது, ​​முஸ்லிம்கள் உட்பட பலர் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று வாழ்த்தியதன் மூலம் ஒற்றுமையின் இதயத் துடிப்பான தருணங்களை அனுபவித்ததாக ஷப்னம் கூறுகிறார்.

அயோத்திக்கு வருவதற்கு உறுதியான தேதி எதுவுமில்லை என்று ஷப்னம் தெளிவுபடுத்துகிறார், தனது பயணம் ஆன்மீக நிறைவுக்கான தனிப்பட்ட தேடலாகவும், மத எல்லைகளைத் தாண்டிய பக்தியின் உள்ளடக்கிய தன்மைக்கு சான்று எனத்  வலியுறுத்துகிறார்.

சமூக ஊடகங்களில் ஷப்னத்தை சாடும் இஸ்லாமியர்கள் சிலர், ஷப்னம் தனது ஆண் நண்பருக்காக திட்டமிட்டு நாடகம் ஒன்றை நடத்துவதாக குற்றம்சாட்டுகின்றனர். எனினும் எதிர்மறை கருத்துக்கள், பழிப்புகளை புறக்கணித்து காவிக் கொடிகளுடன் அயோத்தி நோக்கி பயணத்தை தொடர்கிறார் ஷப்னம்.

ஷப்னத்தின் பயணம் ஒற்றுமையின் அடையாளமாக நிற்கிறது, தடைகளை உடைத்து, அன்புக்கும் பக்திக்கும் எல்லையே இல்லை என்பதை நிரூபிக்கிறது.

Tags: ayodhya ramar templeramar kovilmuslim women
ShareTweetSendShare
Previous Post

2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

Next Post

எளிமையும், மனத்தூய்மையும் நிறைந்தவர் ரமண மகரிஷி! – அண்ணாமலை

Related News

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies