2023 : இந்திய ரயில்வே துறையின் 5 சிறந்த சாதனைகள்!
Jan 14, 2026, 04:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2023 : இந்திய ரயில்வே துறையின் 5 சிறந்த சாதனைகள்!

Murugesan M by Murugesan M
Jan 1, 2024, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023 ஆம் ஆண்டில் இந்திய ரயில்வே துறையில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க 5 சாதனைகளைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

இந்தியா இந்த ஆண்டு பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்து சாதனைப் படைத்துள்ளது. அதில் ரயில்வே துறையில் இந்தியா பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளது. அதில் குறிப்பிடத்தக்க சில சாதனைகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.

1. கின்னஸ் சாதனை :

உலகின் மிக நீளமான நடைமேடையைக் கொண்ட ரயில்நிலையமாக, கர்நாடகாவின் ஹூப்பள்ளி ரயில் நிலையம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இந்த ரயில் நிலையத்தின் நீளம் 1507 மீட்டர் ஆகும். ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையத்தைக் கடந்த மார்ச் 12ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

2. அம்ரித் பாரத் ரயில் என்றால் என்ன

ரயில் நிலையங்களை புதுமைப்படுத்தும் வகையில் அம்ரித் பாரத் ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 508 ரயில் நிலைகளிலும் மறுசீரமைப்பு பணி நடைபெற்றது. இதற்குப் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 6ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டத்தின் மூலம், நாட்டில் மொத்தம் 1309 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டன.

3. 3000 புதிய ரயில்கள் தொடங்க திட்டம் :

பிடிஐ வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாக அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அடுத்த 4-5 ஆண்டுகளில் கூடுதலாக, 3,000 புதிய ரயில்களை அதன் கட்டமைப்பில் அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

4. மின்தூக்கி, மின்படிக்கட்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு :

சுகம்ய பாரத் அபியானின் ஒரு பகுதியாக, மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் ரயில்வே நடைமேடைகளில் எளிதாக நடமாடுவதற்காக, நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் மின்தூக்கி மற்றும் மின்படிக்கட்டுகளின் எண்ணிக்கைகளை இந்திய ரயில்வே அதிகரித்துள்ளது.

2021-22 ஆம் ஆண்டில் 208 மின்தூக்கிகள் மற்றும் 182 மின்படிக்கட்டுகள் இருந்த நிலையில், 2022-23 நிதியாண்டில் 215 மின்தூக்கிகள் மற்றும் 184 மின்படிக்கட்டுகள் நிறுவப்பட்டுள்ளன.

5. ரயில் பயணிகள் அதிகரிப்பு :

இந்திய ரயில்வேவில் தினமும் சுமார் 3 கோடி பேர் பயணம் செய்கின்றனர். பல நாடுகளின் மக்கள் தொகை இந்திய இரயில்வேயில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையைப் போல் இல்லை. இந்திய ரயில்வே 68 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள ரயில்வே நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

உலகின் நான்காவது மிக நீளமான ரயில்வே நெட்வொர்க் இது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா இந்தியாவை விட முந்தியுள்ளன. இது தவிர, வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்திய ரயில்வே பல நாடுகளை விட முன்னணியில் உள்ளது. இந்திய ரயில்வேவில் 13 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர்.

Tags: Indian Railway2023
ShareTweetSendShare
Previous Post

இந்த ஆண்டு வெளிவந்த வாட்ஸ்அப்பின் புதிய அம்சங்கள்

Next Post

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா – ஒருவர் பலி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies