2023 தொழில்நுட்பத்துறையில் நிகழ்ந்தவை!
Jan 14, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2023 தொழில்நுட்பத்துறையில் நிகழ்ந்தவை!

Murugesan M by Murugesan M
Jan 1, 2024, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொழில்நுட்பதின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. எந்த அளவிற்கு தொழில்நுட்பத்தால் நன்மை உள்ளதோ அந்த அளவிற்கு தொழில்நுட்பத்தில் தீமைகளும் உள்ளது.

2023 ஆம் வருடத்தை பொறுத்த வரையில் அதிகமாக பேசப்பட்ட தொழில்நுட்பம் என்றால் அது செயற்கை நுண்ணறிவு ( AI ) தான். இவ்வாறு இந்த ஆண்டு தொழில்நுட்பத்தால் நிகழ்ந்த சில சம்பவங்களை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

1. பாட் ( Bot ) :

கடந்த 2022-ல் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி அறிமுகமானபோது பயனர்கள் அதன் ஊடாக உரையாடல் வடிவில் டெக்ஸ்ட்களை மட்டுமே ஜெனரேட் செய்யும் பாட் என்ற வகையில் அது இருந்தது. இப்போது டெக்ஸ்ட், இமேஜ் மற்றும் ஆடியோவை இதில் பயனர்கள் பெற முடிகிறது.

இலவச பயன்பாடு என்பது கடந்து ப்ரீமியம் வெர்ஷனும் பயன்பாட்டில் உள்ளது. அதேநேரத்தில் கூகுள் நிறுவனத்தின் ‘பார்ட்’ சாட்பாட் ஜிபிடி-க்கு போட்டியாக வந்து நிற்கிறது. இதை கூகுளில் பயனர்கள் பெற முடிவது மிகவும் எளிது. முக்கியமாக பல்வேறு கூகுள் சேவைகளை கையாளும் திறன் கொண்டுள்ளது. இது தவிர பல்வேறு ஜெனரேட்டிவ் ஏஐ பாட்கள் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

2. ChatGPT vs Bard :

சாட்ஜிபிடி(ChatGPT) என்பது மனிதர்களை போன்று பதில்களை உருவாக்கப் பயிற்சியளிக்கப்பட்ட ஒரு பெரிய அளவிலான மொழி உருவாக்க மாதிரியாகும். கேள்வி பதில், மொழிபெயர்ப்பு மற்றும் உரை சுருக்கம் போன்ற பல்வேறு இயற்கை மொழி செயலாக்கப் பணிகளை எளிமையாக்கும் நோக்கில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் சாட்ஜிபிடி செயலிக்கு நேரடி போட்டியாக, கூகுள் நிறுவனம் ”பார்ட்” தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. மனிதனின் ஆழமான அறிவாற்றல் உடன், கூகுள் பன்மொழிகளில் தன்னகத்தே கொண்டுள்ள வலிமை, புத்திசாலித்தனம் மற்றும் கண்டுபிடிப்பு அகியவற்றை ஒன்றிணைக்கும் நோக்கில் புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்தது.

3. டீப்ஃபேக் :

அமெரிக்கா, இந்தியா என உலக நாடுகளில் அதிக கவனம் பெற்றது டீப்ஃபேக் விவகாரம். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி உள்ளிட்டோரின் டீப்ஃபேக் கன்டென்ட்கள் கவனம் பெற்றன. தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் அந்த வீடியோ சித்தரிக்கப்பட்ட விதம்.

போலி வீடியோக்கள், ஆடியோக்கள், புகைப்படங்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. நான் கர்பா நடனமாடுவது போன்ற போலி வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி இதுகுறித்து அப்போது கருத்து தெரிவித்திருந்தார்.

4. ட்விட்டர் பெயர் மாற்றம் :

ட்விட்டரின் பிரபலமான லோகோவான நீலக் குருவி மாற்றப்பட்டு X என ரீபிராண்டிங் செய்து பெயரும் எக்ஸ் என மாற்றப்பட்டது. இந்த திடீர் மாற்றம் உலகையே யூகிக்க வைத்திருந்த நிலையில் ட்விட்டர் X பெயர் மாற்றம் குறித்து அதன் உரிமையாளர் எலான் மஸ்க் விளக்கம் அளித்தார்.

X என்பது தனது லட்சியமான அனைத்தையும் உள்ளடக்கிய தளமான ‘எல்லாமே செயலி’என்பதை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது என்றும் இனி மேல் ட்விட்டர் செயலியில் கிட்டத்தட்ட அனைத்தையும் பதிவிடும் வகையில் மாற்றப்படும் என்றும் கூறியிருந்தார்.

5. ஆப்பிள் விஷன் ப்ரோ :

ஆப்பிள் அதன் முதல் மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டை ‘விஷன் ப்ரோ’ என்று அறிமுகம் செய்தது. ஹெட்செட் முதன்மையாக ஒரு ஆக்மென்ட் ரியாலிட்டி சாதனமாக நிலைநிறுத்தப்பட்டது. இதன் டயலைப் பயன்படுத்தி எளிதாக AR மற்றும் VR முறைகளுக்கு மாற்றிக் கொள்ளலாம்.

ஆப்பிள் கம்ப்யூட்டர், லேப்டாப், டி.வி போன்றவற்றிலும் ப்ளூடூத் மூலம் இந்த ஹெட்செட்டை இணைத்து பயன்படுத்தும் வகையில் இது உள்ளது.

Tags: AIchat gpt
ShareTweetSendShare
Previous Post

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு திட்டம்!

Next Post

இராமர் கோவில் கும்பாபிஷேகம் : நடிகர் விக்டர் பானர்ஜிக்கு அழைப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies