இராணுவம், போலீஸ் இணைந்து செயல்பட அமித்ஷா அறிவுறுத்தல்!
Jul 25, 2025, 07:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராணுவம், போலீஸ் இணைந்து செயல்பட அமித்ஷா அறிவுறுத்தல்!

Web Desk by Web Desk
Jan 2, 2024, 07:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ், சி.ஆர்.பி.எஃப். மற்றும் இராணுவம் ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டிருக்கிறார்.

ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்திருக்கிறது. கடந்த 3 மாதங்களில் மட்டும் காவல்துறை டி.எஸ்.பி., 2 இராணுவ மேஜர்கள், இராணுவ வீரர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை மற்றும் வளர்ச்சிப் பணிகளின் வேகம் குறித்து ஆய்வு செய்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்டக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, இராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, தலைமைச் செயலாளர் அடல் டுல்லோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை இயக்குநர் தாபன் தேகா, டி.ஜி.பி. ஆர்.ஆர்.ஸ்வைன் மற்றும் துணை இராணுவப் படைகளின் தலைவர்கள், பாதுகாப்பு ஏஜென்சிகள் கலந்து கொண்டன.

இக்கூட்டத்தில், காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ், சி.ஆர்.பி.எஃப். மற்றும் துணை இராணுவத்தினர் இணைந்து செயல்பட வேண்டும். மாநில உளவுத்துறையை வலுப்படுத்த ஊக்கப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும், ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளாக அமலில் உள்ள மத்திய அரசின் ‘ஜீரோ டெரர்’ திட்டம் குறித்தும், சமீபத்தில் பூஞ்ச் ​​மற்றும் ரஜோரியில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

தவிர, கூட்டத்தில் ரஜோரி மாவட்டத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள குகைகளில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த விரிவான அறிக்கையை பாதுகாப்பு முகமைகள் சமர்ப்பித்ததாகவும் கூறப்படுகிறது.

அதோடு, மத்திய அரசின் முக்கிய பாதுகாப்பு அமைப்பான தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. டைரக்டர் ஜெனரல் மாநிலத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக ஏஜென்ஸி எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையையும் சமர்பித்தார்.

ஜம்மு காஷ்மீரில் 2026-க்குள் ‘ஜீரோ டெரர்’ திட்டத்தை முழுமையாக செயல்படுத்த மோடி அரசு இலக்கு நிர்ணயித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: delhijammu kashmirHigh level security Meeting
ShareTweetSendShare
Previous Post

சாதனை படைத்த சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்!

Next Post

“லட்சத்தீவின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது” – பிரதமர் மோடி

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies