இராணுவம், போலீஸ் இணைந்து செயல்பட அமித்ஷா அறிவுறுத்தல்!
Jan 14, 2026, 11:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராணுவம், போலீஸ் இணைந்து செயல்பட அமித்ஷா அறிவுறுத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 2, 2024, 07:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ், சி.ஆர்.பி.எஃப். மற்றும் இராணுவம் ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டிருக்கிறார்.

ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்திருக்கிறது. கடந்த 3 மாதங்களில் மட்டும் காவல்துறை டி.எஸ்.பி., 2 இராணுவ மேஜர்கள், இராணுவ வீரர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை மற்றும் வளர்ச்சிப் பணிகளின் வேகம் குறித்து ஆய்வு செய்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்டக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, இராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, தலைமைச் செயலாளர் அடல் டுல்லோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை இயக்குநர் தாபன் தேகா, டி.ஜி.பி. ஆர்.ஆர்.ஸ்வைன் மற்றும் துணை இராணுவப் படைகளின் தலைவர்கள், பாதுகாப்பு ஏஜென்சிகள் கலந்து கொண்டன.

இக்கூட்டத்தில், காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ், சி.ஆர்.பி.எஃப். மற்றும் துணை இராணுவத்தினர் இணைந்து செயல்பட வேண்டும். மாநில உளவுத்துறையை வலுப்படுத்த ஊக்கப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும், ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளாக அமலில் உள்ள மத்திய அரசின் ‘ஜீரோ டெரர்’ திட்டம் குறித்தும், சமீபத்தில் பூஞ்ச் ​​மற்றும் ரஜோரியில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

தவிர, கூட்டத்தில் ரஜோரி மாவட்டத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள குகைகளில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த விரிவான அறிக்கையை பாதுகாப்பு முகமைகள் சமர்ப்பித்ததாகவும் கூறப்படுகிறது.

அதோடு, மத்திய அரசின் முக்கிய பாதுகாப்பு அமைப்பான தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. டைரக்டர் ஜெனரல் மாநிலத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக ஏஜென்ஸி எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையையும் சமர்பித்தார்.

ஜம்மு காஷ்மீரில் 2026-க்குள் ‘ஜீரோ டெரர்’ திட்டத்தை முழுமையாக செயல்படுத்த மோடி அரசு இலக்கு நிர்ணயித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: delhijammu kashmirHigh level security Meeting
ShareTweetSendShare
Previous Post

சாதனை படைத்த சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்!

Next Post

“லட்சத்தீவின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது” – பிரதமர் மோடி

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies