லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் துணைத் தலைவர் கொல்லப்பட்டார்!
Jan 14, 2026, 06:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் துணைத் தலைவர் கொல்லப்பட்டார்!

Murugesan M by Murugesan M
Jan 3, 2024, 12:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் ஹமாஸ் துணைத் தலைவர் சலே அல்-அரூரி மற்றும் அவரது மெய்க்காவலர்கள் கொல்லப்பட்டார்கள்.

லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹமாஸ் படையின் அரசியல் தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் மாதம் ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலையடுத்து இஸ்ரேல் காசாவை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. லெபானான் ஹமாஸ் படைக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி லெபனானில் ஹெஸ்பொல்லா படையுடனும் மோதல் போக்கை இஸ்ரேல் கையாண்டு வருகிறது.

இந்நிலையில் பெய்ரூட் நகரில் நேற்று இரவு நகரின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஹமாஸின் அரசியல் துணைத் தலைவர் சலே அல்-அரூரி (Saleh Arouri) என்பவர் கொல்லப்பட்டுள்ளார். இவர்தான் ஹமாஸ் படையின் ராணுவ பிரிவை உருவாக்கியவர்.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படை இந்த தாக்குதலையும், சலே அல்-அரூரி (Saleh Arouri) கொல்லப்பட்டதையும் உறுதி செய்துள்ளது. அவருடன் மேலும் 2 ஹமாஸ் ராணுவ தளபதிகளும், அமைப்பைச் சேர்ந்த மற்ற 4 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். 57 வயதான சலே அல்-அரூரி போர் தொடங்கிய பின், கொலை செய்யப்பட்டவர்களில் ஹமாஸின் மிக மூத்த நபர் என தெரியவந்துள்ளது.

சாலே அரோரி ஹமாஸ் அமைப்பின் ஆயுதப்பிரிவான கஸ்ஸாம் படைப்பிரிவின் முக்கிய தலைவராகவும், ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் நெருங்கிய கூட்டாளியாகவும் இருந்தவர். இவர் லெபனானில் இருந்து ஹமாஸ் அமைப்பிற்கும் ஹிஸ்புல்லாவிற்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரேலிய செய்தித் தொடர்பாளரும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆலோசகருமான மார்க் ரெகவ், இத்தாக்குதல் இஸ்ரேல் நடத்தியது என்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், அத்தாக்குதலை யார் நடத்தி இருந்தாலும் அது லெபனான் அரசின் மீதான தாக்குதல் அல்ல, பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா அமைப்பின் மீதான தாக்குதலும் அல்ல. இது ஹமாஸ் தலைமை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி அரூரியின் கொலை குறித்து நேரடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை, ஆனால், இராணுவம் “எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள மிகவும் தயாராக இருப்பதாக” கூறினார். லெபனானில் உள்ள இரண்டாவது பாதுகாப்பு அதிகாரி அரூரி கொல்லப்பட்ட தகவலை உறுதி செய்தார்.

Tags: Hamas Vice Leader Killed in Israel Attack on Lebanon!
ShareTweetSendShare
Previous Post

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சொத்துகள் ஏலம்!

Next Post

ஹேமந்த் சோரன் ஆலோசகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies