மணிப்பூரில் நள்ளிரவு 12.01 மணிக்கு 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மணிப்பூர் மாநிலம் உக்ருல் பகுதியில் நள்ளிரவு 12.1 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவானது.
உக்ருலில் இருந்து 26 கிலோமீட்டர் தென்மேற்கில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 35 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
உக்ருல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டது. இதனால், மக்கள் அச்சமடைந்தனர்.
நிலநடுக்கத்தால், ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.
முன்னதாக, மேற்கு வங்க மாநிலம் அலிபுர்டுவார் பகுதியில் இரவு 10.55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது.