பாரன்குயிலாசவில் பாடகி சஹீராவுக்கு 21 அடி வெண்கல சிலை!
Jan 14, 2026, 08:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரன்குயிலாசவில் பாடகி சஹீராவுக்கு 21 அடி வெண்கல சிலை!

Murugesan M by Murugesan M
Jan 3, 2024, 06:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரன்குயிலா நகரம் பாடகி சஹீரா மீது வைத்துள்ளது அன்பும், மரியாதையும் வெளிப்படுத்தும் விதமாக அவருக்கு 21 அடி உயரத்தில் வெண்கல சிலை ஒன்றை அந்நகரத்தில் வைத்துள்ளது.

1977-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி கொலம்பியாவின் பாரன்குயிலா நகரில் பிறந்தவர் சஹீரா இஸவேல் மெபாரக் ரிபோல்.

இவர் தனது எட்டாவது வயதில் தனது முதல் பாடலை எழுதி, பதின்மூன்று வயதில் ஆல்பம் வெளியிட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இவரது முதல் இரண்டு ஆல்பங்களும் வரவேற்பு பெறாமல் போக இவர் தனது மூன்றாவது ஆல்பத்தின் ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் இவரே முழுக்கவனம் செலுத்தி, கடுமையாக உழைத்தார்.

1996-ஆம் ஆண்டு பிஸ் டெஸ்கல்சோஸ் (Pies Descalzos) என்ற பெயரில் வெளியான அந்த ஆல்பம் 3 மில்லியன் எண்ணிக்கையில் விற்றுத் தீர்ந்தன. அந்த ஆல்பத்தில் அவரது அரேபிய, கொலம்பிய முத்திரை பளிச்சென்று வெளிப்பட்டது.

முதலில் ஸ்பானிஷ் மொழியுலகில் மட்டுமே பிரபலமாக இருந்த இவர், வெகு சீக்கிரம் இசை ரசிகர்களைத் தனது கவர்ச்சி நடனத்தாலும் எல்லாவற்றுக்கும் மேலாக இனிமையான குரலாலும் தன்வசப்படுத்தினார்.

2010-ல் வெளியான இவரது ஆல்பத்தின் ஒரு பாடல்தான் “ஷமினா மினா ஓய்..ஓய்.. வக்கா..வக்கா ஓய்..ஓய்”. இந்தப் பாடல் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளின் தீம் பாடலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, தொடக்க நாள் நிகழ்ச்சியில் பாடி, ஆடி கவர்ந்தார். அப்பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.

இப்படி தனது கடின உழைப்பால் முன்னேறிய இவர் ஒரு காலகட்டத்தில் பாப் இசை உலகின் சூப்பர் ஸ்டாரானார். இப்படி தனது கடின உழைப்பால் முன்னேறிய இவருக்கு பாரன்குயிலா நகரத்தின் அரசு நிர்வாகம், நகரின் முக்கிய இடமான மக்டலேனா ஆற்றின் கரை அருகே 21 அடி உயரத்தில் (6 மீட்டர்) சஹீராவுக்கு வெண்கல சிலையை வைத்திருக்கிறது.

அதுவும் சஹீராவின் மிகப் பிரபலமான ‘ஹிப்ஸ் டோண்ட் லை’ ஆல்பத்தில் இடம்பெற்ற இடை அசைவு நடன தோற்றத்தில் இச்சிலை சஹீராவின் பெற்றோர் முன்னிலையில் கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி திறக்கப்பட்டது.

இதன்மூலம் பாரன்குயிலா நகரம் அவர் மீது வைத்துள்ளது அன்பும், மரியாதையும் வெளிப்படுகிறது.

Tags: 21 feet bronze statue of singer Shakira in Barranquilla
ShareTweetSendShare
Previous Post

இராமர் கோவில் கும்பாபிஷேகம்: அயோத்திக்கு 108 அடி நீள அகர்பத்தி!

Next Post

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அதிரடி நடவடிக்கை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies